பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 732 

   உயக்கம் - துன்பம். நம்பி இரண்டனுள் முன்னது உலோகபாலன்; பின்னது சீவகன், வேந்தன் : தனபதி. புகழ் - ஈண்டு விச்சைக்கு ஆகுபெயர். இவனால் அவர் கேண்மை வளர்தலின் விச்சையை வித்தாகவும் கேண்மையைப் பயிராகவும் உருவகித்தார்.

( 119 )
1285 புற்றிடை வெகுளி நாகம்
   போக்கறக் கொண்ட தேனு
மற்றிடை யூறு செய்வான்
   வானவர் வலித்த தேனும்
பொற்றொடிக் கிறத்த லில்லை
   புலம்புகொண் டழேற்க வென்றான்
கற்றடிப் படுத்த விஞ்சைக்
   காமரு காம னன்னான்

   (இ - ள்.) கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான் - கற்றுப் பழகிய விஞ்சையையுடைய விருப்பம் பொருந்திய சீவகன்; புற்றிடை வெகுளி நாகம் போக்கு அறக் கொண்ட தேனும் - புற்றிலுள்ள வெகுளியையுடைய நாகம் மீளாதபடி கடித்ததானாலும்; மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்த தேனும் - வேறு இடையூறு செய்வதற்கு விண்ணவர் சூழ்ந்த நிலையாயினும்; பொற்றொடிக்கு இறத்தல் இல்லை - நங்கைக்கு இறப்புக் கிடையாது; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - நீ வருத்தம் கொண்டு அழாதேகொள் என்றான்.

   (வி - ம்.) காமன் அன்னான் : சீவகனுக்கு ஒரு பெயர்.

   போக்கு - மீட்சி, பொற்றொடிக்கு என்பது சுட்டுப்பொருட்டாய் நின்றது. அழேற்க - அழாதேகொள்.

( 120 )
1286 பொழிந்துநஞ் சுகுத்த லச்ச
   மிரைபெரு வெகுளி போகங்
கழிந்துமீ தாடல் காலம்
   பிழைப்பென வெட்டி னாகும்
பிழிந்துயி ருண்ணுந் தட்ட
   மதட்டமாம் பிளிற்றி னும்ப
ரொழிந்தெயி றூனஞ் செய்யுங்
   கோளென மற்றுஞ் சொன்னான்

   (இ - ள்.) நஞ்சு பொழிந்து உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம் கழிந்து மீதாடல் காலம் பிழைப்பு என - நஞ்சைப் பெய்து சிந்துதல், அச்சம், இரையெனக் கருதுதல், பெரிய வெகுளி, இன்பம், மனக்களி மிகுந்து நின்றாடுதல்,