| பதுமையார் இலம்பகம் |
734 |
|
| 1288 |
மண்டலிப் பால தென்றான். |
| |
மன்னிய தெண்மட் டாயின் |
| |
கொப்புளாம் விரலிற் றேய்த்தான் |
| |
கொன்னுமா நாகங் கொண்டாற் |
|
|
(இ - ள்.) விரலின் தேய்த்தால் - கடித்த வாயை விரலால் தேய்த்தால்; கொன்னும் மாநாகம் கொண்டாற் கொப்புளாம் - அச்சந்தரும் பெருநாகந் தீண்டியதாயின் கொப்புள் கொள்ளும்; மன்னிய தௌ்மட்டு ஆயின் மண்டலிப்பாலது - பொருந்திய தெளிவான தேன்போல நீர் வருமாயின் மண்டலிப் பகுதியாகும்; கன்னியைக் கடித்த நாகம் கன்னியே - (இது கொப்புள் கொள்வதால்) இவளைக் கடித்த பாம்பு கன்னியே; அரசர் சாதி - சாதியும் அரசர் சாதியே; அழுந்தி ஆழ்ந்த மூன்று எயிறு - தைத்து அழுந்தி ஆழ்ந்த பற்கள் யமதூதி ஒழிந்த காளி, காளாத்திரி, இயமன் என்னும் மூன்றுமே; கன்னி நோக்கம் - உதயமும் கன்னியே; அன்னதே - ஆதலின் இஃது இறத்தலில்லை.
|
|
(வி - ம்.) குக்குட சர்ப்பமாதலின், அதற்குக் கேடில்லை யென்று கருதி, 'கன்னியே' என்றான்.
|
|
இது கொப்புளங் கொள்ளலின் இவளைக் கடித்த பாம்பு கன்னியே என்பது கருத்து. சாதி அரசர்சாதி என்க. காளி காளாத்திரி யமன் யமதூதி என்னும் நான்கு நஞ்சுப் பற்களுள் யமதூதி ஒழிந்த மூன்று பற்களுமே அழுந்தியுள்ளன.
|
( 123 ) |
| 1289 |
குன்றிரண் டனைய தோளான் |
| |
கொழுமலர்க் குவளைப் போதங் |
| |
கொன்றிரண் டுருவ மோதி |
| |
யுறக்கிடை மயில னாடன் |
| |
சென்றிருண் டமைந்த கோலச் |
| |
சிகழிகை யழுத்திச் செல்வ |
| |
னின்றிரண் டுருவ மோதி< |
| |
நோ்முக நோக்கி னானே. |
|
|
(இ - ள்.) குன்று இரண்டு அனைய தோளான் செல்வன் - மலைகள் இரண்டு போன்ற தோளையுடைய சீவகனான செல்வன்; கொழுமலர்க் குவளைப் போது அங்கு ஒன்று இரண்டு உருவம் ஓதி - வளமிகு மலராகிய குவளையை அங்கே மூன்று உருவம் ஓதி; உறக்கு இடை மயிலனாள் தன் சென்று இருண்டு அமைந்த கோலச் சிகழிகை அழுத்தி - உறக்கத்திலுள்ள மயில் போன்றவளின் நீண்டு இருண்டு அமைந்த அழகிய மயிர் முடியிலே
|