பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 735 

அழுத்தி; நின்று இரண்டு உருவம் ஓதி நேர்முகம் நோக்கினான் - பெயர்ந்து நின்று பின்னும் இரண்டு உருவம் ஓதி முகத்தை நேரே நோக்கினான்.

   (வி - ம்.) மலர்க்குவளை: மலர்: அடைமொழி. ஒன்றிரண்டு உம்மைத்தொகை. உருவம் : உரு என்பதன் திரிபு. உறப்பிடை: சாரியை இன்றி உருபேற்றது. முகம் - தியானம். இவன் ஐந்து உரு ஓதினமையின் இம் மந்திரம் பஞ்ச நமஸ்காரம்.

( 124 )
1290 நெடுந்தகை நின்று நோக்க நீள்கடற் பிறந்த கோலக்
கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிரு ளுடைந்த தேபோ
லுடம்பிடை நஞ்சு நீங்கிற் றொண்டொடி யுருவ மார்ந்து
குடங்கையி னெடிய கண்ணாற் குமரன்மே னோக்கி னாளே

   (இ - ள்.) நெடுந்தகை நின்று நோக்க - சீவகன் நின்று நோக்கின அளவிலே; நீள்கடல் பிறந்த கோலக் கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிருள் உடைந்ததேபோல் - பெருங் கடலிலே தோன்றிய அழகிய வெங்கதிரையுடைய ஞாயிறு எதிர்ப்படக்கரிய இருள் நீங்கியது போல; உடம்பிடை நஞ்சு நீங்கிற்று - உடம்பிலிருந்து நஞ்சு விலகியது; ஒண்தொடி உருவம் ஆர்ந்து - பின்னர் அக் கதிர் வளையாளின் உருவத்தைக் கண்ணால் அவன் நுகராநிற்க; குடங்கையின் நெடிய கண்ணால் குமரன்மேல் நோக்கினாள் - அவளும் உள்ளங்கை போன்ற நீண்ட கண்களாற் சீவகனை நோக்கினாள்.

   (வி - ம்.) ஆர்ந்து - ஆர; எச்சத் திரிபு.

   நெடுந்தகை : சீவகன்; நின்று மந்திரமோதி நோக்க என்பது கருத்து. நீள்கடற்பிறந்த கோலக்கடுங் கதிர்க்கனலி என்றது ஞாயிற்று மண்டிலத்தை. இவ்வுவமையடைகள் சீவகன் குடிப்பிறப்பு அழகு ஒளி முதலியவற்றை விளக்கி நின்றன. காரிருள், நஞ்சிற்குவமை. அப்பேரழகினை நோக்கற்கேற்ற கண்ணையுடையாள் என்பார் நெடிய கண்ணால் நோக்கினாள் என விதந்தார்.

( 125 )
1291 நோக்கினா ணிறையு நாணு
  மாமையுங் கவினு நொய்திற்
போக்கினாள் வளையும் போர்த்தாள்
  பொன்னிறப் பசலை மூழ்கிற்
றாக்கினா ளநங்க னப்புத்
   தூணியை யமரு ளானா
தோக்கிய முருக னெஃக
  மோரிரண் டனைய கண்ணாள்.