பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 746 

   பதுமப்பாயல்மேல். மைவரை மைந்தன் - மலையிலுறைகின்ற முருகன். நிணந்து - பிணைத்து. ”கட்டில் நிணக்கும் இழிசினன்” (புறநா. 82-3) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. அணங்கு - ஈண்டு இல்லுறை தெய்வம்.

( 146 )
1312 கடைகந் தன்னதன் காமரு வீங்குதோ
ளடையப் புல்லினன் போன்றணி வெம்முலை
யுடைய வாகத் துறுதுயர் மீட்டவ
ளிடைய தாகுமெ னாருமி லாவியே.

   (இ - ள்.) ஆரும் இல் என் ஆவி - போகாமல் நிறுத்துவார் இல்லாத என் உயிர்; கடை கந்து அன்ன - கடைந்து செய்த தூண் போன்ற; தன் காமரு வீங்கு தோள் - தன் அழகிய பருத்த தோள்களால்; அடையப் புல்லினன் போன்று - என் மெய்ம் முழுதும் தழுவினவன் போல; ஆகத்து அணி வெம்முலை உறு துயர் உடைய மீட்டவன் - மார்பில் அணிந்த வெம்முலை உற்ற பசப்பு உடையும்படி தடவி மீட்டவனின்; இடையது ஆகும் - இடத்தில் உள்ளதாகும்.

   (வி - ம்.) கடைகந்து : வினைத்தொகை. காமரு - அழகிய; ஆகத்து அணி வெம்முலை உறுதுயர் உடைய மீட்டவன் என மாறுக. ஆருமில் ஆவி - உயக்கொள்வோர் ஒருவருமில்லாததாகிய உயிர்.

( 147 )
1313 இறுதி யில்லமிர் தெய்துந ரீண்டியன்
றறிவி னாடிய வம்மலை மத்தமா
நெறியி னின்று கடைந்திடப் பட்டநீர்
மறுகு மாக்கடல் போன்றதென் னெஞ்சமே

   (இ - ள்.) இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி - சாதல் இல்லாமைக்குக் காரணமான அமிர்தத்தைப் பெற விரும்பிய தேவர்கள் திரண்டு; அறிவின் நாடிய - தம் அறிவினாலே அதனை ஆராய வேண்டி; அன்று அம்மலை மத்தமா நின்று - அக் காலத்தில் மந்தரமலை மத்தாக நின்று; நெறியின் கடைந்திடப்பட்ட நீர் மறுகும் மாக்கடல் போன்றது - முறைமையாகக் கடைந்திடப்பட்ட நீர் கலங்குங் கடல் போன்றதாகும்; என் நெஞ்சம் - என் உள்ளம்.

   (வி - ம்.) எய்துநர் : பெயர்

   இறுதி - சாக்காடு. சாக்காடின்மைக்குக் காரணமான அமிர்து என்க. அம்மலை : உலகறிசுட்டு. மந்தரம் - மத்தம் : கடைகழி.

( 148 )
1314 நகைவெண் டிங்களு நார்மட லன்றிலுந்
தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும்
பகைகொண் மாலையும் பையுள்செ யாம்பலும்
புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே