பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 759 

   நிறுத்த காம வாயில் - நிறையே அருளே உணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே' (தொல் - மெய்ப். 25) என்பதை மேற்கொண்டு, '25' என இவ் வொப்பில் வந்ததால், ' உட்கு' என இதற்குப் பொருள் கொண்டனர் போலும்.

( 175 )
1341 உள்விரித் திதனை யெல்லா
  முரைக்கென மொழிந்து விட்டான்
றெள்ளிதிற் றெரியச் சென்றாங்
  குரைத்தலுங் குமரன் றேறி
வெள்ளிலை யணிந்த வேலான்
   வேண்டிய தாக வென்றா
னள்ளிலை வேல்கொண் மன்னற்
  கமைச்சனஃ தமைந்த தென்றான்

   (இ - ள்.) இதனை யெல்லாம் உள்விரித்து உரைக்க என மொழிந்துவிட்டான் - (அதனைக் கேட்ட மன்னன்) இந் நிலைமையெல்லாம் அவனுக்குத் தெளிவாக விளக்கியுரைப்பாயாக என்று, கூறிவிட்டான்; ஆங்குச் சென்று தௌ்ளிதின் தெரிய உரைத்தலும் - மந்திரியும் ஆங்குச் சென்று தெளிவாக விளக்கிக் கூறலும்; குமரன் தேறி - சீவகன் தெளிய வுணர்ந்து; வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான் - வெற்றிலை போன்ற முகமுடைய வேலையுடைய மன்னன் விரும்பியவாறே ஆகுக என்றான்; அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான் - (அது கேட்டு) கூரிய வேலணிந்த மன்னனிடம் சென்று மந்திரி அஃது அப்படியே முடிந்த தென்றான்.

 

   (வி - ம்.) இதனை - இக்கருத்தினை. குமரன் : சீவகன். வேண்டியது - தனபதிமன்னன் விரும்பியது. வெள்ளிலை - வெற்றிலை. அணிந்த : உவமவுருபு. மன்னற்கு : தனபதிக்கு. அமைச்சன் : மதிதரன். அஃது - அக்காரியம்.

( 176 )
1342 பொன்றிய வுயிரை மீட்டான்
   பூஞ்சிகைப் போது வேய்ந்தா
னன்றியு மாமெய் தீண்டி
  யளித்தன னழகின் மிக்கா
னொன்றிய மகளிர் தாமே
  யுற்றவர்க் குரிய ரென்னா
வென்றிகொள் வேலி னாற்கே
  பான்மையும் விளைந்த தன்றே.