| பதுமையார் இலம்பகம் |
761 |
|
| 1344 |
கணிபுனைந் துரைத்த நாளாற் கண்ணிய கோயி றன்னுண் |
| |
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி |
| |
யணியுடைக் கமல மன்ன வங்கைசோ் முன்கை தன்மேற் |
| |
றுணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார். |
|
|
(இ - ள்.) கணி புனைந்து உரைத்த நாளால் - கணி ஆராய்ந்து கூறிய நாளிலே; கண்ணிய கோயில் தன்னுள் - நன்றென்று கருதிய கோயிலிலே; மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி - மணி புனைந்த மகளிராகிய நல்லார் மங்கல மரபினை உரைத்து; அணியுடைக் கமலம் அன்ன அங்கை சேர் முன்கை தன்மேல் - அழகுறு தாமரை அன்ன அங்கையினையுடைய முன் கையிலே; துணிவுடைக் காப்புக் கட்டி - (இருவர்க்கும்) உறுதியுறு காப்பினை அணிய; சுற்றுபு தொழுது காத்தார் - சுற்றித் தொழுது புறப்படாமற் காத்தார்.
|
|
|
(வி - ம்.) கணி - கணிவன். கண்ணிய - கருதிய. கட்டி - கட்ட. சுற்றுபு - சுற்றி.
|
( 179 ) |
| 1345 |
மழகளிற் றெருத்திற் றந்த |
| |
மணிக்குட மண்ணு நீரா |
| |
லழகனை மண்ணுப் பெய்தாங் |
| |
கருங்கடிக் கொத்த கோலந் |
| |
தொழுதகத் தோன்றச் செய்தார் |
| |
தூமணிப் பாவை யன்னார் |
| |
விழுமணிக் கொடிய னாளும் |
| |
விண்ணவர் மடந்தை யொத்தாள். |
|
|
(இ - ள்.) தூ மணிப் பாவை அன்னார் - தூய மாணிக்கப் பாவை போன்றவர்; மழ களிற்று எருத்தில் தந்த மணிக்குடம் மண்ணும் நீரால் - மழகளிற்றின் பிடரிலே கொண்ர்ந்த மணிக்குடத்திலிருந்து குளிக்கும் நீரினால்; அழகனை மண்ணுப் பெய்து - சீவகனைக் குளிப்பாட்டி; ஆங்கு அருங்கடிக்கு ஒத்த கோலம் - அவ்விடத்தே திருமணத்திற்குப் பொருந்திய ஒப்பனையை; தொழுதகத் தோன்றச் செய்தார் - நன்கு மதிக்கும்படி விளங்க ஒப்பித்தனர்; விழு மணிக்கொடி அனாளும் - சிறந்த மாணிக்கக்கொடி போன்ற பதுமையும்; விண்ணவர் மடந்தை ஒத்தாள் - (அவ்வொப்பனையாலே) வானவர் மகள் போன்றனள்.
|
|
|
(வி - ம்.) மழகளிறு - இளைய யானை. எருத்து - பிடர். மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய கடவுள்நீர். அழகனை : சீவகனை. மண்ணுப்பெய்து - (மங்கல) நீராட்டி. கடி - திருமணம். பாவையன்னார் - ஈண்டு வண்ணமகளிர். மணிக்கொடியனாள் : பதுமை.
|
( 180 ) |