| பதுமையார் இலம்பகம் |
765 |
|
|
மாலை மின்னுகின்ற; துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான் - இரு முலைகளினிடத்தே அமிழ்ந்துவிட்டான்.
|
|
|
(வி - ம்.) மிடைந்து - மிடைய. அணிந்த : பெயர். புரிகதிர் - மிக்க கதிர். கதிர் விளங்கு மீன்களின் கதிரோடே மிடையும்படி திங்களின் கதிரைத் திரட்டி வல்லவன் கோத்தணிந்தவற்றை யொக்கும் கதிரையுடைய முத்தமின்னும் முலையென்க.
|
( 187 ) |
வேறு
|
|
| 1353 |
எழின்மாலை யென்னுயிரை |
| |
யான்கண்டே னித்துணையே முலையிற் றாகிக் |
| |
குழன்மாலைக் கொம்பாகிக் |
| |
கூரெயிறு நான்போழ்த லஞ்சி யஞ்சி |
| |
யுழன்மாலைத் தீங்கிளவி |
| |
யொன்றிரண்டு தான்மிழற்று மொருநாட் காறு |
| |
நிழன்மாலை வேனாண நீண்டகண்ணே |
| |
நெய்தோய்ந்த தளிரே மேனி. |
|
|
(இ - ள்.) எழில்மாலை என் உயிரை யான் கண்டேன். - அழகினை இயல்பாக வுடைய என் உயிரை யான் கண்டேன்; இத்துணையே - அது இவ் வளவினதே; முலையிற்று ஆகி - முலையினை உடைத்தாய்; நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே - ஒளியையியல்பாக வுடைய வேல் வெள்க, நீண்ட கண்களையும்; நெய் தோய்ந்த தளிர் மேனியே - நெய்ப்பை யுடைய தளிரனைய மேனியையும்; குழல் மாலைக் கொம்பு ஆகி - குழலையும் மாலையையும் உடையதொரு கொம்பாய், கூர் எயிறு நாப் போழ்தல் அஞ்சி அஞ்சி - கூரிய பற்கள் நாவைப் பிளக்குமென்று அஞ்சி அஞ்சி; உழல் மாலைத் தீ கிளவி - உழலும் இயல்புடைய நாவானது இனிய மொழியை; ஒரு நாள் காறும் ஒன்று இரண்டுதான் மிழற்றும் - ஒருநா ளெல்லாம் ஒன்றிரண்டே மொழியும்.
|
|
|
(வி - ம்.) எழில்மாலை என் உயிர் : முதல் சினை வினையொடு முடிந்தது. இது நயப்பு.
|
|
|
என்உயிர் யான் கண்டேன் என்றது ”காணாமரபிற்று உயிர் என மொழிவோர் பொய்ம்மொழிந்தனர் யான் கண்டேன்” என்பது பட நின்றது. இச் செய்யுளொடு,
|
|
| |
”காணா மரபிற் றுயிரென மொழிவோர் |
|
| |
நாணிலர் மன்றபொய்ம் மொழிந் தனரே |
|
| |
யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே |
|
| |
சொல்லு மாடும் மென்மெல இயலும் |
|