| 
பதுமையார் இலம்பகம் | 
777  | 
  | 
| 
 விளங்கும் செய்குன்றே!; புனலே! - நீர் நிலையே!; வழையே! - சுர 
புன்னையே!; தழையே! - தழையே!; விரை ஆர் பொழிலே! - மணம்நிறை மலர்க் காவே!; விரி 
வெண்ணிலவே! - மலர்ந்த வெண் திங்களே!; உயிர் காவலன் உள் வழி உரையீர் - என் உயிர் 
முதல்வன் இருக்கும் இடத்தை உரைப்பீராக! 
 | 
  | 
| 
    (வி - ம்.) 
நிரைவீழ் அருவி - வரிசையாக வீழ்கின்ற அருவி. செய்குன்றாகலின் நிரைவீழ் அருவி என்றார். 
நிமிர்பொன் - உயர்ந்த பொன். பொன்சொரிதல் - பொன்னொளி வீசுதல். வழை - சுரபுன்னை. விரை 
- மணம். காவலன் : சீவகன். 
 | 
( 211 ) | 
   
|  1377 | 
எரிபொன் னுலகின் னுறைவீ ர்தனைத் |  
|   | 
தெரிவீர் தெரிவில் சிறுமா னிடார்ற் |  
|   | 
பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமா |  
|   | 
லரிதா லுயிர்காப் பமரீ ரருளீர். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) 
எரி பொன் உலகின் உறைவீர்! - ஒளிரும் பொன் உலகிலே வாழ்வீர்!; இதனைத் தெரிவீர் - (ஆதலின்) 
என் காதலன் போன வழியை அறிந்திருப்பீர்; தெரிவு இல் சிறு மானிடரின் பரிவு ஒன்றிலிர் 
- (தெரிந்திருப்பவும்) தெரியாத சிறு மனிதரைப்போல அருளிலிரா யிராநின்றீர்; படர்நோய் 
மிகும் - துன்ப நோய் மிகும்; உயிர் காப்பு அரிது - (அதனால்) உயிர்காத்தல் இனி அரிது; 
அமரீர்! - வானவரே!; அருளீர் - உயிரைக் காக்க அவனை அருள்வீராக. 
 | 
  | 
| 
    (வி - ம்.) 
பொன்னுலகின் னுறைவீர் என்றது இதனைத் தெரிவீர் என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. 
தேவர் உலகினிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தவிடத்திருந்தே உணரவல்லார் ஆகலின் இங்ஙனம் 
கூறினள். தெரிவில் மானிடர் என்பது நும்போன்ற அறியமாட்டாத இயல்புடைய மானிடர் 
என்றவாறு. படர் - துன்பம் அமரீர் : அமரர் என்பது விளியுருபேற்று நின்றது. 
 | 
( 212 ) | 
|  1378 | 
புணார்வின் னினிய புலவிப் பொழுதுங் |  
|   | 
கணவன் னகலின் னுயிர்கை யகற |  
|   | 
லுணார்வீ ரமரார் மகளீ ரருளிக் |  
|   | 
கொணார்வீர் கொடியே னுயிரைக் கொணார்வீர். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) 
அமரர் மகளீர்! - வானவர் மகளிரே!; புணர்வின் இனிய புலவிப் பொழுதும் - கூட்டத்தினும் 
இனிமையையுடைய புலவிக் காலத்தும்; கணவன் அகலின் உயிர் கையகல்தல் உணர்வீர் - கணவன் 
தழுவுதல் நீங்கின் உயிர் நீங்குதலை அறிவீராகலின்; கொடியேன் உயிரை அருளிக் கொணர்வீர்! 
கொணர்வீர் - கொடியவளாகிய என் உயிரை அருள் செய்து கொண்டு தருவீர்! கொண்டுதருவீர்! 
 | 
  |