| பதுமையார் இலம்பகம் |
782 |
|
|
உருகுகின்ற அக்காலத்தே; கெழீஇயினாள் - நெருங்கியவளாகய; கேள்வி நல்யாழ்க் கிளை நரம்பு அனைய சொல்லாள் தோழி துன்னி - கேள்விக்குரிய நல்ல யாழின் கிளையென்னும் நரம்பினது இசையைப் போன்ற சொல்லாளாகிய தோழி ஆங்குவந்து; கழி பெருங் கவலை நீங்க - மிகப் பெருங் கவலை தவிர; காரண நீர சொன்னாள் - காரணமான தன்மையை உடைய சொற்களைக் கூறினாள்.
|
|
|
(வி - ம்.) ஆங்கும் : உம் : இசை நிறை. காமமும், இருவினையும், நிலையாமையும் முதலியவற்றைக், 'காரண நீர' என்றார். பிரிவுணர்த்தி ஆற்றுவித்துச்சீவகன் பிரியாமையின் தோழி ஆற்றுவிக்கின்றாள்.
|
( 221 ) |
| 1387 |
தௌ்ளறல் யாறு பாய்ந்த திரைதவழ் கடலின் வெஃகி. |
| |
யள்ளுற வளிந்த காம மகமுறப் பிணித்த தேனு |
| |
முள்ளுற வெந்த செம்பொ னுற்றநீர்ப் புள்ளி யற்றாற் |
| |
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காத லென்றாள். |
|
|
(இ - ள்.) கள் உற மலர்ந்த கோதாய் - தேன் பொருந்த மலர்ந்த மாலையாய்!; தௌ் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி - தெளிந்த நீரையுடைய ஆறுகள் பாய்ந்த அலை தவழும் கடலினும் மிகுந்து; அள் உற அளிந்த காமம் அகம் உறப் பிணித்த தேனும் - நுகரும் தன்மை உறும்படி பழுத்த காமம் உள்ளம் இறுகப் பிணித்த தாயினும்; காதலர் காதல் - காதலித்தோர் காதல்; உள்உற வெந்த செம்பொன் உற்ற நீர்ப் புள்ளி அற்று - உள்ளத்தே அடங்கிப் பிறர்க்குத் தோன்றாதிருக்க வேண்டின் வெந்த செம்பொன்னிற் பொருந்திய நீர்த்துளி போலத் தோன்றாது.
|
|
|
(வி - ம்.) அற்று : குறிப்பு வினைமுற்று.
|
|
|
வெஃகி - ஆசை மிகுந்து. கையால் அள்ளிக்கொள்ளலாம்படி கனிந்த காமம் எனினுமாம் அகம் - நெஞ்சம். உள்ளுறவேண்டின் என்க; நெஞ்சத்துள்ளேயே பொருந்திப் புறத்தார்க்குப் புலப்படாதிருக்க விரும்பின் என்பது கருத்து கள் - தேன்.
|
( 222 ) |
| 1388 |
ஓடரி யொழுகி நீண்ட |
| |
வொளிமலர் நெடுங்க ணாரைக் |
| |
கூடரி யுழுவை போல |
| |
முயக்கிடைக் குழையப் புல்லி |
| |
யாடவ ரழுந்தி வீழ்ந்தும் |
| |
பிரிவிடை யழுங்கல் செல்லார் |
| |
பீடழிந் துருகும் பெண்ணிற் |
| |
பேதைய ரில்லை யென்றாள். |
|
|
(இ - ள்.) ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளிமலர் நெடுங்கண்ணாரை - ஓடுகின்ற செவ்வரியுடன் மிகவும் நீண்ட ஒளி பொருந்திய மலரனைய நீண்ட கண்ணாரை; கூடு அரி உழுவை போல ஆடவர் முயக்கிடைக் குழையப் புல்லி - தம் தம் பெடையுடன்
|
|