| பதுமையார் இலம்பகம் |
785 |
|
|
பிரிந்தவனே கணவனாக அவற்றே பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்; சொரிந்தவை தொகுத்து நோக்கின் - சொரிந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால்; தொடுகடல் வெள்ளம் ஆற்றா - தொட்ட கடலின் பெருக்கும் உறையிடவும் போதாது; பாவாய்! பரிந்து அழுவதற்கு அடியிட்ட ஆறு கண்டாய் - பாவையே! பரிவுற்று மேலும் அழுதற்கு இந்நாள் அடியிட்டபடியென்றறிவாய்.
|
|
|
(வி - ம்.) இப்பொழுது பிரிந்த இவனுக்கே என்பது படப் பிரிந்தவற்கு என ஒருமையாற் கூறினர். அன்புடைக்காதலர் பிறவிகடோறும் கணவனும் மனைவியுமாகப் பிறப்பர் என்பது ஒரு கொள்கை. இதனை,
|
|
| |
”நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம் |
|
| |
மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம் |
|
| |
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்.” (மணி. 21. 29 - 31) |
|
|
என வரும் மணிமேகலையானும் உணர்க.
|
|
|
பரிந்தழுவதற்கு அடியிட்டவாறு என்றது இங்ஙனம் அழும் அழுகைக்கு முடிவில்லை என்றவாறு.
|
( 226 ) |
| 1392 |
அன்பினி னவலித் தாற்றா |
| |
தழுவது மெளிது நங்க |
| |
ளென்பினி னாவி நீங்க |
| |
விறுவது மெளிது சோ்ந்த |
| |
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் |
| |
துகைத்தவத் துன்பந் தாங்கி |
| |
யின்பமென் றிருத்தல் போலு |
| |
மரியதிவ் வுலகி லென்றாள். |
|
|
(இ - ள்.) அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது - நம் காதலரிடம் அன்பினாலே வருந்தி ஆற்றவியலாமல் அழுவதும் எளிது; நங்கள் என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது - நம் உடம்பிலிருந்து உயிர்போம்படி இறத்தலும் எளிது; சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பப்பட்டார் - தம் காதலர் சேர்ந்து பிரிந்ததனால் பிறந்த துன்பத்தாலே வருத்தப்பட்ட மகளிர்; துகைத்த அத் துன்பம் தாங்கி - அங்ஙனம் வருத்தின அவ்வருத்தத்தைப் பொறுத்து; இன்பம் என்று இருத்தல் இவ்வுலகில் அரியது போலும் என்றாள் - இது நமக்கு இன்பம் என்று இருப்பதே இவ்வுலகில் அரியதாகும் என்றாள்.
|
|
|
(வி - ம்.) நங்கள் : கள் : அசை. போலும் : ஒப்பில் போலி.
|
|
|
அவலித்து - வருந்தி. எல்லோரும் செய்வதொன்றாகலின் அழுவது எளிது என்றாள். இறுவதும் - இறந்து படலும். மெய்யுணர்வுடை
|
|