| பதுமையார் இலம்பகம் |
786 |
|
|
யார்க்குத் துன்பம் வீடுபேற்றிற்குக் காரணமாதல் பற்றி இத்துன்பமே நமக்கின்பம் என்று அவலியாதிருத்தல் கூடும் ஆயின் அங்ஙனம் இருத்தல் செயற்கரிய செயலென்பாள் 'துகைத்த அத்துன்பந்தாங்கி இன்பம் என்றிருத்தல் போலும் அரியது இவ்வுலகில்' என்றாள்.
|
( 227 ) |
| 1393 |
மயற்கையிம் மக்கள் யோனிப் |
| |
பிறத்தலும் பிறந்து வந்தீங் |
| |
கியற்கையே பிரிவு சாத |
| |
லிமைப்பிடைப் படாத தொன்றாற் |
| |
கயற்கணி னளவுங் கொள்ளார் |
| |
கவற்சியுட் கவற்சி கொண்டார் |
| |
செயற்கையம் பிறவி நச்சுக் |
| |
கடலகத் தழுந்து கின்றார். |
|
|
(இ - ள்.) மயற்கை இம் மக்கள் யோனிப் பிறத்தலும் - குற்றமுடைய இம் மக்கட் பிறப்பிற் பிறத்தலும்; பிறந்து வந்து ஈங்குப் பிரிவு சாதல் இயற்கை - பிறந்து வந்து இவ்வுலகிற் பிரிதலும் இறத்தலும் இயற்கை; இமைப்பிடைப் படாதது ஒன்றால் - இமைப்பளவும் நடுவில் தங்காதது ஒன்று, ஆதலால்; கவற்சி கயற்கணின் அளவும் கொள்ளார் - அறிஞர் கவலை மீன்கண்ணளவாயினும் கொள்ளார்; உள் கவற்சி கொண்டார் செயற்கை அம்பிறவி நச்சுக் கடலகத்து அழுந்துகின்றார் - மனக்கவலை கொண்டவர்கள் பற்றுள்ளத்தால் உண்டாகும் பிறவியாகிய நச்சுக் கடலிலே அழுந்துகின்றவர்கள்.
|
|
|
(வி - ம்.) (பலபிறப்பிலும்) பிறந்து வந்து இம்மக்கள் யோனியிற் பிறத்தலும் மயற்கை என்பர் நச்சினார்க்கினயர். கயற்கணின் அளவு : அளவின் சிறுமை குறிப்பது; ஒரு மாத்திரையளவு.
|
( 228 ) |
| 1394 |
இளமையின் மூப்புஞ் செல்வத் |
| |
திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற் |
| |
கிளைநரிற் பிரிவு நோயில் |
| |
காலத்து நோயு நோக்கி |
| |
விளைமதுக் கமழுங் கோதை |
| |
வேலினும் வெய்ய கண்ணாய் |
| |
களைதுய ரவலம் வேண்டா |
| |
கண்ணிமைப் பளவு மென்றாள் |
|
|
(இ - ள்.) இளமையில் மூப்பும் - இளமைக் காலத்தே மூப்பு வருமென்பதையும்; செல்வத்து இடும்பையும் - செல்வமுள்ள போதே வறுமைத் துன்பம் வருமென்பதையும்; கிளைநரில்
|
|