| கேமசரியார் இலம்பகம் |
799 |
|
|
படுதலின் இறுமளவும் பிறழ்தலில்லாக் கற்பினையுடையோர் என்பார் நாணிற் றீராக் கற்பின்னவர் என்றார். முலைக் கண்களின் எழிலைக் கூர்ந்து நோக்கித் தன்னுள்ளக் கிழியின் எழுதிப் பின் முயங்குபவன் என்றவாறு. இதனால் காட்சியின்பமும் உற்றின்பமும் ஒருங்கே கூறப்பட்டன. முள்குதல் - முயங்குதல். மலையும் கானமு முதலியவற்றின் எழில் கண்டு மகிழ்வதென் நோக்கம் என்று சீவகன் சுதஞ்சணனுக்குக் கூறியதற்கிணங்க (1175) ஈண்டு மகிழ்வோடேகுகின்றான் என்ற நயம் உணர்ந்து மகிழ்க.
|
|
|
இச் செய்யுளும் நூலாசிரியரின் இரக்கத்தைக் காட்டுகின்றது.
|
( 2 ) |
| 1414 |
கனிகொள் வாழைக் காட்டுட் |
| |
கருமை மெழுகி யவைபோன் |
| |
றினிய வல்லா முகத்த |
| |
முசுவுங் குரங்கு மிரியத் |
| |
துனிவு தீர நோக்கித் |
| |
தோன்றல் செல்லு முன்னாற் |
| |
பனிவெண் டிரைசூழ் கடல்போற் |
| |
பழுவந் தோன்றிற் றவணே. |
|
|
(இ - ள்.) கனிகொள் வாழைக்காட்டுள் - பழமுடைய வாழைக்காட்டிலே; கரு மை மெழுகியவைபோன்று இனிய அல்லா முகத்த - கரிய மையை மெழுகிவைத்தவை போலும் அழகில்லாத முகத்தையுடையனவாகிய; முசுவும் குரங்கும் இரியத் துணிவுதீர நோக்கி - முசுவும் குரங்கும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுதலின், அவற்றின் அச்சம் நீங்குமாறு அருளுடன் நோக்கி; தோன்றல் செல்லும் முன்னால் - தலைவன் போகும் அவ்விடத்தின் முன்னே; பனி வெண் திரைசூழ் கடல்போல் - குளிர்ந்த வெள்ளிய அலைசூழ் கடல்போல; பழுவம் தோன்றிற்று - ஒரு காடு தோன்றியது; அவண் - அவ்விடத்தே.
|
|
|
(வி - ம்.) முசு - கருங்குரங்கு. இரிதல் - கெட்டோடுதல், துனிவு - துன்பம். நோக்கி என்றது அவற்றின் அச்சந்தீர்தற்குக் காரணமான அருட்பார்வையாலே நோக்கி என்பதுபட நின்றது, இதனால் சீவக நம்பியின் பேரருளுடைமை கூறப்பட்டது. ”கடத்தற் கின்னாக் கல்லதர் அத்தம் இதுவே” என்றுணர்த்தற்குப் ”பணி வெண்திரைசூழ் கடல் போற் பழுவம்” என்றார். பழுவம் - காடு.
|
( 3 ) |
| 1415 |
பருகு வாரிற் புல்லிப் |
| |
பயங்கண் மாறத் துறக்கு |
| |
முருகு விம்மு குழலார் |
| |
போல மொய்கொ டும்பி |
|