| கேமசரியார் இலம்பகம் |
802 |
|
|
| 1418 |
கொய்தாமந் தாழ்ந்தொசிந்த | |
| |
குளிர்பூம்பிண்டிக் கோமானே | |
| |
யிஃதேநின்சொ லியல்பென்றா | |
| |
லடியேனின்னைத் தொழுதேனே. | |
|
|
(இ - ள்.) செய்தான் இருவினையின் பயத்தைச் சென்று சேரும் என்றி - இருவினையையுஞ் செய்த ஒருவன் அவ் வினையின் பயனைச் சென்று நுகரும் என்று கூறுகின்றாய் (அவ்வாறு கூறிய நீயே); அதன் பயத்தை எய்தான் பிறனே துய்த்தல் இயல்பு என்றி - இருவினைப் பயனைச் செய்தவனே அடையான், மற்றவன் நுகர்தலே இயற்கை என்றாய்; கொய்தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர்பூம்பிண்டிக் கோமானே - கொய்து தொடுத்த மாலை தங்கி நுடங்கும் தண்ணிய மலர்ப்பிண்டியின் நீழலில் எழுந்தருளிய இறைவனே!; இஃதே நின்சொல் இயல்பு என்றால் - இவ்வாறு இரண்டுபட்டிருக்கும் இதுவே நீ மொழியும் மொழிகளின் தன்மையென்றால்; அடியேன் நின்னைத் தொழுதேனே - அடியேன் அஞ்சி நின்னை வணங்குகின்றேன்.
|
|
|
(வி - ம்.) இருவினை - நல்வினையுந் திவினையும். பயம் - பயன். அவையாவன - இன்பமுந் துன்பமும்.
|
|
|
இஃதே என்னுஞ் சுட்டு இங்ஙனம் இரண்டுபட்டிருக்குமிதோ என்பதுபட நின்றது.
|
|
|
உயிர் ஒன்றாதலின் செய்தவனே வினைப்பயனைத் துய்த்தல் இயல்பு என்றும், உயிர் ஒன்றாயினும் பல பிறப்பு எடுத்துப் பல உடம்புகளினாலும் அவ் வினைப்பயனைத் துய்த்தலின் பிறனே துய்த்தல் இயல்பு என்றும் கூறினார் என்க. என்றி : நிகழ்கால முன்னிலை ஒருமை முற்று.
|
( 7 ) |
| 1419 |
உண்டே தனதியல்பி | |
| |
னுணருங்காலை யுயிரென்றி | |
| |
யுண்டாய வ்வவுயிரே | |
| |
பிறிதினில்லை யெனவுரைத்தி | |
| |
வண்டார்த்து நாற்காதம் | |
| |
வண்ணமாலை சுமந்தொசிந்து | |
| |
கொண்டேந்து பூம்பிண்டிக் | |
| |
கோமானின்னைத் தொழுதேனே. | |
|
|
(இ - ள்.) உயிர் தனது இயல்பின் உணருங்காலை உண்டே என்றி - உயிர் தனது இயல்பால் உணர்ந்தால் உண்டே என்று கூறுகின்றாய்; உண்டாய அவ்வுயிரே பிறிதின் இல்லை என உரைத்தி - இருக்கின்றதாக உணரப்பட்ட அவ்வுயிரே மற்றொன்
|
|