| கேமசரியார் இலம்பகம் | 
804  | 
 | 
  | 
| 
 யான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்னுமிவ் வெட்டுமாம். இவற்றின் விளக்கம் முத்தியிலம்பகத்தில் (3076) கூறப்படும், ஆண்டுக் காண்க. இச் செய்யுள், 
 | 
  | 
| ”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் | 
 | 
  | 
| பற்றுக பற்று விடற்கு” (குறள். 350) | 
 | 
  | 
| 
 என்றும், 
 | 
  | 
| ”பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் | 
 | 
  | 
| பற்றி விடாஅ தவர்க்கு” (குறள். 347) | 
 | 
  | 
| 
 என்றும் வரும் இரண்டு திருக்குறட் கருத்தினையுந் தன்பாற் கொண்டுளது. 
 | 
  | 
| 
    கழிப : பலவறிசொல். 
 | 
  | 
| 
    இவை இருபுறவாழ்த்து; தேவபாணித் தாழிசைக்கொச்சக ஒருபோகு. இவற்றின் இடையிடையே நாலசைச்சீர்களும் வந்துள்ளன. 
 | 
( 9 ) | 
வேறு
 | 
  | 
|  1421 | 
இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொண்டு |   |  
|   | 
முனிவர் சித்திர கூடமு னாதெனத் |   |  
|   | 
தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர் |   |  
|   | 
பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இங்ஙனம் இனிதின் ஏத்தி வலம்கொண்டு - இவ்வாறு குரலின் இனிமையோடு வாழ்த்தி வலம்புரிந்துவிட்டு; முனிவர் சித்திரகூடம் முனாது என - முனிவருடைய சித்திரகூடம் முன்னுள்ளதென்று சுதஞ்சணன் கூறியதால்; தனிதின் ஏகுபு - (அதனைக் காண எண்ணித்) தனியே சென்று; தாபதர் வாழ்வது ஓர் பனிகொள் பூம்பொழில் பள்ளிகண்டான் - தாபதர்கள் வாழ்வதாகிய ஒரு குளிர்ச்சி தங்கிய மலர்ப்பொழிலில் உள்ள பள்ளியைக் கண்டான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) சித்திரகூடம், பள்ளியின் பெயர். 'தனித்து' என்பது 'தனிது' என விகாரப்பட்டது. தனிதின் : இன் : அசை. அரோ : அசை. இனிதின் என்புழி இன் அசைச்சொல். என - என்று சுதஞ்சணன் முற்கூறியிருந்தமையால் (1190). 
 | 
( 10 ) | 
|  1422 | 
புல்லு மல்லியும் போகுயர் நீள்கழை |   |  
|   | 
நெல்லு நீர்விளை கேழலுந் தோரையு |   |  
|   | 
மல்ல தீம்பழங் காய்கிழங் காதியா |   |  
|   | 
நல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) புல்லும் அல்லியும் போகுஉயர் நீள்கழை நெல்லும் நீர்விளை கேழலும் தோரையும் - (ஊனை நுகராமல்) புல்லும் 
 | 
  |