பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 805 

அல்லியும் மிக உயர்ந்த மூங்கிலரிசியும் நீரில்விளை குளநெல்லும் தோரை என்னும் நெல்லும்; அல்ல தீம் பழம் காய்கிழங்கு ஆதி ஆ - ஆகிய இவையல்லாமலும் இனிய பழமும் காயும் கிழங்கும் முதலாக; நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான் - நல்லவற்றையே நுகர்வாராகிய தாபதர் வாழும் பள்ளியைச் சேர்ந்தான்.

 

   (வி - ம்.) புல், அல்லி, நெல், கேழல், தோரை என்பன இவற்றின் அரிசிகட்கு ஆகுபெயர். போகுயர் : ஒரு பொருட் பன்மொழி; மிக வளர்ந்த என்க. கேழல் - குளநெல். தோரை - மூங்கிலரிசி. அல்ல என்றது இவையல்லாதவிடத்து என்றவாறு.

 

   நல்லவே என்புழி ஏகாரம் - பிரிநிலை; என்னை? தீயவாகிய ஊன் உணவைப் பிரித்து நிற்றலின் என்க.

( 11 )
1423 அரிய கொள்கைய ராரழ லைந்தினுண்
மருவி வீடு வளைக்குறு மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார்.

   (இ - ள்.) அரிய கொள்கையர் - அரியவான கோட்பாடுகளையுடையவர்; ஆர் அழல் ஐந்தினுள் மருவி வீடு வளைக்குறும் மாட்சியர் - நிறைந்த ஐந்தழலின் நடுவே பொருந்தி வீட்டுலகை வளைத்திடும் பெருமையினர்; விரிய வேதம் விளம்பிய நாவினர் - விளக்கமாக நான்மறை பயின்ற நாவினர்; தெரிவு இல் தீத்தொழில் சிந்தையின் மேயினார் - விளக்கமற்ற தீய தொழிலான காமத்தொழிலைச் சிந்தையிற் கொண்டவர்.

 

   (வி - ம்.) ஆர் அழல் ஐந்திடை மருவி என்றது, நான்கு திசைகளினும் வளர்க்கப்பட்ட ஓமகுண்டத் தீயும் உச்சியிற் கதிரவனுமாகிய ஐந்து தீயின் நடுவண் நின்று என்றவாறு.

 

   தெரிவுஇல் தீத்தொழில் என்றது, காம வேட்கையாலியற்றும் தீவினைகளை.

 

   அரிய கொள்கையாவன : நாலிரு வழக்கில் தாபதப் பக்கம்; 'நீர்பில கால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் - சோர்நடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் - கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் - வானகத் துய்க்கும் வழி.' (பு. வெ. 168) என்பனவும் பிறவுமாம்.

( 12 )
1424 வள்ளி யின்னமு தும்வரை வாழையின்
றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின்
வெள்ள மாரிய னாய்விருந் தார்கென
வுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார்.

   (இ - ள்.) வள்ளி இன் அமுதும் - வள்ளிக்கிழங்காகிய சுவையுடைய உணவும், வரை வாழையின் - மலையிலுண்டாம் வாழையி