| கேமசரியார் இலம்பகம் |
809 |
|
|
| 1430 |
அல்லியும் புல்லு முண்டாங் | |
| |
காரழ லைந்து ணின்று | |
| |
சொல்லிய வகையி னோற்பத் | |
| |
துணியும்வெவ் வினைக ளென்னிற் | |
| |
கல்லுண்டு கடிய வெம்புங் | |
| |
கானுறை புறவ மெல்லாம் | |
| |
புல்லிய வினையை வென்று | |
| |
புறக்கொடை காணு மன்றே. | |
|
|
(இ - ள்.) அல்லியும் புல்லும் உண்டு - அல்லிக் காயில் உள்ள அரிசியையும் புல்லரிசியையும் சாப்பிட்டு; ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று - அங்கே நிறைந்த ஐந்தழலின் நடுவே நின்று; சொல்லிய வகையின் நோற்ப - பகவனார் கூறிய நெறியிலே நோற்பதனால்; வெவ்வினைகள் துணியும் என்னின் - தீவினைகள் அறும் என்றால்; கடிய வெம்பும் கான் கல் உண்டு உறையும் புறவம் எல்லாம் - கொடிய வெப்பமுடைய கானிலே கற்களை உண்டு வாழும் புறாக்கள் யாவும; புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே - தம்மைத் தொடர்ந்த இருவினையையும் வென்று புறங்காணும் அல்லவா?
|
|
|
(வி - ம்.) வெப்பமிக்க பாலையின்கண் கல் முதலியவற்றை உண்டு வாழும் புறாவின் பிறப்பறாமைபோல நல்லனவே உண்டு அழல் நடுவில் நின்று தவமியற்றன் மாத்திரையானே பிறப்பொழியா தென்பது கருத்து.
|
|
|
இதுவும் மாறுபடவந்த உவமத் தோற்றமே.
|
( 19 ) |
| 1431 |
நீட்டிய சடைய மாகி | |
| |
நீர்மூழ்கி நிலத்திற் சோ்ந்து | |
| |
வாட்டிய வுடம்பின் யாங்கள் | |
| |
வரகதி விளைத்து மென்னிற் | |
| |
காட்டிடைக் கரடி போகிக் | |
| |
கயமூழ்கிக் காட்டி னின்று | |
| |
வீட்டினை விளைக்க வேண்டும் | |
| |
வெளிற்றுரை விடுமி னென்றான். | |
|
|
(இ - ள்.) நீட்டிய சடையம் ஆகி - நீண்ட சடையினேம் ஆகி; நீர் மூழ்கி - நீரிலே குளித்து; நிலத்திற் சேர்ந்து - தரையிலே தங்கி; வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி வளைத்தும் என்னின் - வாட்டிய உடம்பினாலே நாங்கள் மேலோன வீட்டை அடைவோம் என்றால்; காட்டிடைக் கரடி போகிக் கயம் மூழ்கி -
|
|