| கேமசரியார் இலம்பகம் |
815 |
|
|
|
தன்பால் அமைந்தது என்னும் இச்சொல்லோவியம் மிகவும் இனிதாதல் உணர்க.
|
|
|
மாமை - அழகு. ஈண்டு அந்நாடு தெவிட்டாத காட்சியின் பமுடைத்தாதற்கு உவமை.
|
( 28 ) |
| 1440 |
தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் | |
| |
பூங்குழன் மடந்தையர் புனைந்த சாந்தமு | |
| |
மாங்கெலா மகிற்புகை யளாய வாசமுந் | |
| |
தாங்கலா றக்கநா டாய தென்பவே. | |
|
|
(இ - ள்.) தேம் கயத்து அணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - இனிய கயத்தின் அழகிய மலர் வாய்விட்ட மணமும்; பூங்குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும் - மலர்க் கூந்தலையுடைய மாதர்கள் அணிந்த சந்தனமும்; அகில் புகை அளாய வாசமும் - அகிற்புகை கலந்த மணமும்; ஆங்குஎலாம் தாங்கலால் தக்கநாடு ஆயது என்ப - அங்கெல்லாம் தரித்தலின் தக்கநாடு என்னும் பெயர்த்தாயிற்றென்பர்.
|
|
|
(வி - ம்.) தெகிழ்ந்த - நெகிழ்ந்த; மலர்ந்த என்றவாறு. தக்க நாடு - தகுதியுடைய நாடு; தகுதி -தாங்குதல். எனவே தக்க நாடென்பது அதற்குக் காரணப் பெயர் என்றவாறு.
|
|
|
என்ப - என்று சான்றோர் கூறுவர்.
|
( 29 ) |
| 1441 |
சண்பக நறுமலர் மாலை நாறுசாந் | |
| |
தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலை | |
| |
யுண்பத மியாவர்க்கு மூன மில்லது | |
| |
வண்புகழ் நாட்டது வண்ண மின்னதே. | |
|
|
(இ - ள்.) சண்பக நறுமலர் மாலை - சண்பகமலர்களாகிய மணமிகு மாலையும்; நாறு சாந்து - மணக்கும் சந்தனமும்; ஒண்பழுக்காயினோடு - சிறந்த பழுக்காயுடன்; உருவம் மெல்இலை - அழகிய வெற்றிலையும்; உண்பதம் - உண்ணும் உணவும் என இவை; யாவர்க்கும் ஊனம் இல்லது - எவருக்கும் குறைவின்றி அமைந்தது; வண்புகழ் நாட்டது வண்ணம் இன்னது - வளமிகும் புகழுற்ற தக்கநாட்டின் இயல்பு இத்தகையதே.
|
|
|
(வி - ம்.) பழுக்காய் - பாக்கு. உருவம் - அழகு. மெல்லிலே : வினைத்தொகை; வெற்றிலை. உண்பதம் : வினைத்தொகை. நாறுசாந்து என்பதும் அது. ஒண்பழுக்காய், வண்புகழ் : பண்புத்தொகைகள்.
|
|
|
மலர் முதலிய இன்னோரன்னவற்றால் ஊனம் இல்லது என்க. ஊனம் - குறைவு. வண்ணம் - இயல்பு.
|
( 30 ) |