| கேமசரியார் இலம்பகம் |
818 |
|
|
|
(இ - ள்.) பேரொலி வளநகர் - பேரொலியை உடைய அவ்வளமிகு நகரம்; இளையவர் எறிசுறவு - வீரர் எறியும் சுறா மீனாகவும்; ஏந்து பூங்கொடி மறிதிரை - ஏந்திய பூங்கொடி மறி திரையாகவும்; மாடம் மாக்கலம் - மாடங்கள் பெரிய மரக்கலமாகவும்; பெறல் அருந் திருவனார் அமுதம் - கிடைத்தற்கரிய திருவைப் போன்ற மகளிர் அமுதமாகவும்; அறைகடல் ஆயது என்ப - ஆரவாரமுடைய கடலாயிற் றென்ப.
|
|
|
நகர், சுறவையும் திரையையும் மரக்கலங்களையும் அமுதத்தையும் உடையதாய்ப் பாற்கடலை ஒத்தது என்றவாறு. வீரர் எதிர்வாரை எறிதலின் சுறவினையும் கொடி காற்றால் அசைதலின் திரையினையும் மாடம் மாந்தரையும் சரக்குக்களையும் கொண்டிருத்தலின் கலத்தினையும் மகளிர் தங்காதலர் உயிர் தளிர்ப்ப முயங்கலின் அமிழ்தத்தினையும் உவமையாகக் கூறினார்.
|
|
|
இத் தொடர் வேறுபட வந்த உவமவிசேடமாம் என்பர் நச்சினார்க்கினியர்.(தொல். உவ. 32)
|
( 35 ) |
வேறு
|
|
| 1447 |
மதியக டுரிஞ்சுஞ் சென்னி | |
| |
மாடநீண் மறுகு தோறும் | |
| |
பொதியவிழ் மாலை வீழ்ந்து | |
| |
பொன்செய்நன் கலன்கள் சிந்தி | |
| |
நிதியறை திறந்து நோக்கி | |
| |
யன்னதோர் நீர்மை யெய்திப் | |
| |
புதியவர்க் கியங்க லாகாப் | |
| |
பொற்பொடு பொலிந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம்நீள் மறுகு தோறும் - திங்களின் நடுவைத் தேய்க்கும் உச்சியையுடைய மாடங்களையுடைய நீண்ட தெருக்கள்தோறும்; பொதி அவிழ் மாலை வீழ்ந்து - மயிர்முடி குலைதலின் முத்துமாலை வீழந்து; பொன்செய் நன்கலன்கள் சிந்தி - பொன்னால் இயற்றிய பேரணிகளும் சிந்துதலாலே; நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி - நிதியறையைத் திறந்து பார்த்தால் ஒத்ததொரு தன்மை பெற்று; புதியவர்க்கு இயங்கல் ஆகாப் பொற்பொடு பொலிந்தது - அச்சமுண்டாக்குதலின் புதியவர்க்குச் செல்லலாகாத அழகொடு விளக்கம் உற்றது.
|
|
|
(வி - ம்.) உரிஞ்சும் - தேய்க்கும். மறுகு - தெரு. நிதியறை - கருவூலம். புதியவர் பொருள் கிடக்குமிடத்தே புகுதற்கு அஞ்சுதல் இயல்பாகலின் புதியவர்க்கு இயங்கலாகாப் பொற்பு என்றார். இதனால் அந்நகரத்துத் திருவுடைமை உணர்த்தப்பட்டது.
|
( 36 ) |