| கேமசரியார் இலம்பகம் |
821 |
|
|
|
னாவான்; புணர்மின் என்று பேசினான் - அவனுக்குக் கொடுங்கோள் என்று கூறினான்; அன்று கொண்டு பெருவிருந்து ஓம்புகின்றான் - அன்று தொட்டுச் சுபத்திரன் தன் மகள் அத்தகையானைக் காண்டற்குப் பெருவிருந்து இடுதலைக் கைக்கொண்டுள்ளான்.
|
|
|
(வி - ம்.) தன் கணவனைத் தவிர மற்றோர் அவட்கு ஆடவராய்த் தோன்றாரென்பது தோன்றப் பலரையும் நோக்கும் அவளை, 'மாசிலாள்' என்றும், 'காசிலாள்' என்றும் கூறினார்.
|
|
|
மதிவல்லான் என்றது கணிவனை. விதி - நூல் கூறும் முறை. காசிலாள் - குற்றமற்றவள் என்னும் பொருட்டு; இது வாளா அவள் என்னுஞ் சுட்டு மாத்திரையாய் நின்றது.
|
|
|
பெருவிருந்தோம்புகின்றான் என்றது, அத்தகையானைக் காணும் பொருட்டு என்பதுபட நின்றது.
|
( 40 ) |
| 1452 |
தாழ்தரு பைம்பொன் மாலை தடமலர்த் தாம மாலை | |
| |
வீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்று | |
| |
சூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே சார்ந்து நோக்கு | |
| |
மூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே. | |
|
|
(இ - ள்.) ஒருபிடி நுசுப்பினாள் சூழ்வளைத் தோளி - ஒரு பிடியில் அடங்கும் இடையினாளாகிய, வளைசூழ்ந்த தோளினாள்; தாழ்தரு பைம்பொன்மாலை - தூங்கப்பட்ட பைம்பொன்னாலான மாலை; தடமலர்த் தாமம் மாலை - பெரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை; வீழ்தரு மணிசெய் மாலை - விருப்பம் ஊட்டும் மணிகளாற் செய்யப்பட்ட மாலை; இவற்றிடை - ஆகிய இவற்றின் இடையிலே; மின்னின் நின்று - மின்போல நின்று; செம்பொன் தூணையே சார்ந்து - பொன்னாலான தூணைப் பொருந்திநின்று, ஊழ்படு காதலானை நோக்கும் - ஊழ்தருகின்ற கணவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
|
|
|
(வி - ம்.) தான் நோக்குழிச் சிறிது தோன்றித் தன்னைப் பிறர் நோக்குழிக் கணத்திலே தூணின் மறைந்து விடுதல் பற்றி, மின்னின், தூணையே சார்ந்து நோக்கும் என்றார்.
|
|
|
தந்தை செய்யுள் விருந்திடையே இவள் ஒரு தூணைச் சார்ந்து நின்று தனக்கு ஊழினால் தரப்படுஞ் காதலனை நோக்குவாள் என்க.
|
( 41 ) |
| 1453 |
சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளு | |
| |
மாயிரத் தெட்டு நோ்ந்த வாரமு தடிசி லூட்டி | |
| |
யேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டு | |
| |
போயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே. | |
|