| கேமசரியார் இலம்பகம் |
837 |
|
|
|
குங்குமம் இடப்பட்டனவாய்; அடிநிலம் பரந்து முத்து அணிந்த வெம்முலை - அடியிடம் பரந்து முத்துக்களை அணிந்த விருப்பூட்டும் முலைகள்; இடை நிலம் செகுப்பன - தம்மைச் சுமந்திருக்கின்ற இடையாகிய இடத்தைக் கெடுப்பன; என்னை என் செயா - யான் அகப்பட்டால் எத்துன்பத்தையும் செய்யும் அல்லவோ!
|
|
|
(வி - ம்.) 'உலகில் தொழிலாற் கடியவர்கள் கட்டுண்ணப்படுவரென்றும், மனம் கொடியவர்கள் ஒன்றாற் புடையுண்ணப் படுவரென்றும் ஒரு பொருள் தோன்றிற்று' என்பார் நச்சினார்க்கினியர்.
|
|
|
தம்மைத் தாங்குவதாகிய இடையினையே செகுப்பன; ஏதிலனாகிய என்னை என் செயா! எதுவுஞ்செய்யும் என்பது கருத்து.
|
( 72 ) |
| 1484 |
கரியவுள் வெறியன கட்டப் பட்டன | |
| |
புரிவொடு புறத்திடப் பட்ட பூங்குழல் | |
| |
தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டன | |
| |
பெரியகண் போலவும் பேது செய்யுமே. | |
|
|
(இ - ள்.) கரிய - கருநிறமுடையனவாய்; உள் வெறியன - உள்ளே மணமுடையனவாய்; கட்டப்பட்டன - கட்டி முடிக்கப்பட்டனவாய்; புரிவொடு புறத்து இடப்பட்ட பூங்குழல் - கடை குழைதலுடன் எருத்தத்தே கிடத்தப்பட்ட பூங்குழல்கள்; செய்ய நீண்டன - செய்யனவாய் நீண்டிருக்கின்றனவாகிய; பெரிய கண்போலவும் பேது செய்யும் - பெரிய கண்களைப்போலவும் வருத்தம் புரிகின்றன; தெரியின் என் செயா - ஆராயின் எல்லாஞ் செய்ய வல்லன.
|
|
|
(வி - ம்.) செய்யனவும் நீண்டனவும் பெரியனவும் ஆகிய கண்கள் தம் நல்லியல்பிற்கு மாறாகத் தீங்கு செய்கின்றன; இங்ஙனமாகக் கரியனவும் வெறியனவும் புறத்தே தள்ளப்பட்டனவுமாகிய தீயவியல்புடைய ஐம்பால் அக்கண்போற் றீங்கு செய்தல் வியப்போ? ஆராயின் அவை எதுவும் அஞ்சாமற் செய்யும் என்பது கருத்து.
|
|
|
இதன்கண் சிறப்புப் பொருளையே உவமையாக்கி இரண்டன் தீமையையும் விளக்குதல் உணர்க.
|
|
|
கொடியனவாய், உள்ளே கள்ளின் மயக்குடையனவாய்க் கட்டுண்ணப்பட்டனவாய் எப்போதும் திருகுதலுடனே தம்மிடத்தினின்றும் கீழ்ப்போந்து கிடக்கும்படி புறத்திடப்பட்டனவாய் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. உள்வெறியன - உள்ளே ஒன்றுமில்லதனவாய் எனினும் ஆம்.
|
( 73 ) |
| 1485 |
காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந் | |
| |
தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க் | |
| |
கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக் | |
| |
கோதநீ ரமுதமு முலகும் விற்குமே. | |
|