| கேமசரியார் இலம்பகம் |
838 |
|
|
|
(இ - ள்.) காதன்மை கண்ணுளே அடக்கி - தன் வேட்கையையெல்லாம் தன் கண்ணுள்ளே கிடத்தி; கண் எனும் தூதினால் துணிபொருள் உணர்த்தி - அக் கண்ணென்கின்ற தூதாலே தான் எண்ணிய பொருளை எனக்கு அறிவித்து; தான் தமர்க்கு ஏதின்மைபடக் கரந்திட்ட - தான் தன் சுற்றத்தார்க்கு வேட்கை யாகிய காரணம் தோன்றாதவாறு மறைத்திட்ட; வாள் கண் நோக்கு - கேமசரியின் நோக்கம்; ஓதநீர் அமுதமும் உலகும் விற்கும் - கடலில் தோன்றிய அமுதத்தையும் உலகையும் தனக்கு விலையாகக் கொள்ளும்.
|
|
|
(வி - ம்.) காதன்மை : காதற்றன்மை. கண்ணென்னும் தூது என்றது தானோக்காக்காற் றன்னை நோக்கும் களவு நோக்கத்தை. இஃதவள் உடம்பாட்டைத் தனக்குணர்த்துதலின் தூது எனப்பட்டது. தமர் அறியாமைப் பொருட்டு என்னை ஏதின்மைபடவும் நோக்கும். நோக்கு என்க.
|
|
| ”ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் |
|
|
| காதலார் கண்ணே உள.” (குறள். 1099) |
|
|
|
இச்செய்யுள் தேவரின் ஒப்பற்ற புலமைக்கோர் எடுத்துக்காட்டாகும்.
|
|
|
'கண்ணுளே' என்பதற்குத் 'தன்னுளே' என்பதூஉம் பாடம்.
|
( 74 ) |
வேறு
|
|
| 1486 |
மிகுகொடா முத்தஞ் சூட்டி | |
| |
மீளிமை தீர்த்து மின்னு | |
| |
நகுகொடா மணிக ணல்ல | |
| |
தெளித்துக்கொண் டெழுதி நன்பொன் | |
| |
முகபடாம் வைப்ப வாட்செற் | |
| |
றழன்றுகண் கரிந்த முல்லைத் | |
| |
தொகுகடாங் கோதை வெய்ய | |
| |
துணைமணி முலைக டாமே. | |
|
|
(இ - ள்.) முல்லைத் தொகு கள்தாம் கோதை வெய்ய துணைமணி முலைகள் தாம் - முல்லைமலரின் திரண்ட தேன்பரக்கும் மாலையையுடைய இணையாகிய, மணியணிந்த வெய்யனவாகிய முலைகள்தாம்; கொடா மிகு மீளிமை தீர்த்து - ஒழிந்தவற்றிற்குக் கொடாத மிகுகின்ற வலிமையைத் தீர்த்து; முத்தம் சூட்டி - முத்துக்களை அணிந்து; மின்னும் நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக் கொண்டு எழுதி - மின்னும் தம்மை யிகழாத மணிகளில் நல்லனவற்றைக் கரைத்துக்கொண்டெழுதி; நன்பொன் முகபடாம் வைப்ப - நல்ல பொற்கச்சாகிய முகபடாத்தையும்
|
|