| கேமசரியார் இலம்பகம் |
841 |
|
|
|
கேமசரி வருத்தம் 'கண்ணுற' 'நல்வள' (சீவக. 1472, 1474) என்பனவற்றிற் கூறினார்.
|
|
|
அரசனுந் தானும் நெருங்கிய கேண்மையுடையர் ஆதலின் அவனுக்கும் ஏனையோக்கும் அறிவித்தான் என்பது கருத்து.
|
|
|
மன்னவன் என்புழி நான்கனுருபோடு உம்மையும் நிலத்தவர்க்கு என்புழி உம்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கன.
|
( 78 ) |
| 1490 |
இடியுமி ழெறிதிரை முழக்கிற் பல்லியங் | |
| |
கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக் | |
| |
கடிமண மியற்றினார் கடவு ணாளினால் | |
| |
வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே. | |
|
|
(இ - ள்.) கொடி அணி வியன் நகர் - கொடி அணிந்த பெரு நகரில்; கடவுள் நாளினால் - நல்லநாளிலே; மைந்தற்கு வடிமலர்க் கோதையை - சீவகனுக்குக் கேமசரியை; இடி உமிழ் எறி திரை முழக்கில் - இடியுமிழ் ஒலியும் வீசும் அலைகடல் முழக்கும்போல; பல்இயம் குழுமி ஆர்த்து எழ - பல திருமண இயங்கள் திரண்டொலிக்க; கடிமணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்.
|
|
|
(வி - ம்.) இடியுமிழ் முழக்குப்போலவும் திரைமுழக்குப் போலவும் பல்லியம் ஆர்த்தெழ என்க.
|
|
|
பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். கடவுள் நாள் - கடவுட்டன்மையுடைய நன்னாள்.
|
( 79 ) |
| 1491 |
மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான் | |
| |
கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகை | |
| |
யணிக்கிட னாயி வரிவை தன்னொடும் | |
| |
பிணித்திடை விடாதவன் பெற்ற வின்பமே. | |
|
|
(இ - ள்.) மணிக்குடம் அழுத்திவைத்த அனைய தோளினான் - மணியாற் செய்த குடத்தை அழுத்திவைத்தாற் போன்ற தோளையுடைய சீவகனின்; கணிக்கு இடம் கொடாநலம் - வடிவிற்குக் கூறிய நூல் வல்லாற்கும் புகழ இடங்கொடாத நலத்தை; அணிக்கு இடன் ஆகிய அரிவை கதிர்த்த காரிகை தன்னொடும் - அணிகட்கு இடம்பெற்ற கேமசரியின் ஒளிரும் அழகுடனே ; பிணித்து - அவர்கள் பிணித்தலால்; அவன் பெற்ற இன்பம் இடைவிடாது - அவன் நுகர்ந்த இன்பம் நீங்காதாயிற்று.
|
|
|
(வி - ம்.) கணி - கணிவன், கதிர்த்தல் - ஒளிர்தல். காரிகை - அழகு. பிணித்து என்ற செய்தெனெச்சத்தை பிணிப்ப எனச் செயவெனெச்சமாக்கி ஏதுப்பொருட்டாக்குக.
|
( 80 ) |