| கேமசரியார் இலம்பகம் |
848 |
|
|
| 1502 |
துணைவண்டு துஞ்சி னீயுந் | |
| |
துஞ்சுவை யென்று நின்கட் | |
| |
பணிகொண்ட தின்மை யாற்றான் | |
| |
பரிவொடு மிருக்கு மன்றே. | |
|
|
(இ - ள்.) மணி வண்டு - கரிய வண்டே!; இம் மாதர் கோதை மதுஉண வந்த போழ்து - நீ இம் மாதரின் மலர்மாலையிலே தேனைப் பருக வந்தபோது; அங்கு இணை வண்டு அங்கு இறந்துபாடு இன்று இரங்கல் இன்றாய் இருக்குமே - அங்குள்ள நின் பெடை வண்டு அங்கேயே இறவாமலும் வருத்தம் இன்றியும் இருக்குமோ?; துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று - நின் பெடை இறப்பின் நீயும் இறந்துபடுவாயென்று உட்கொண்டு; நின்கண் பணிகொண்டது இன்மையால் தான் - உன்னிடத்து உரியதொரு தொழிலை முதலிலேயே தன்னிடத்துக் கொள்ளாமையால்; பரிவொடும் தான் இருக்கும் அன்றே - இறந்துபடாமல் அன்புடனே தான் ஆற்றியிருக்கும் அல்லவோ? (என்றான்)
|
|
|
(வி - ம்.) 'துணைவண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்று' என்றது என் பொருட்டே நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்னும் குறிப்புடையது.
|
|
|
மணிவண்டு : அண்மைவிளி. இருக்குமே : ஏ : வினா. பணி யென்றது, மகளிர் இருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டுவன தேடிவருதல் ஆடவர்க்குப் பணியாதலை.
|
( 91 ) |
| 1503 |
குழவியாய்ப் பிறந்து வெய்யோன் | |
| |
குமரனாய் குறுகி யிப்பால் | |
| |
விழைவுதீர் கிழவ னாகி | |
| |
விழுக்கதி ருலந்து வீழ | |
| |
மழலைவண் டுழல நக்க | |
| |
மல்லிகை யலங்கல் சூட்டிக் | |
| |
குழல்புரை கிளவி யோடுங் | |
| |
கொழும்புகை யமளி சோ்ந்தான். | |
|
|
(இ - ள்.) வெய்யோன் குழவியாய்ப் பிறந்து - கதிரவன் காலையிற் குழவியாகத் தோன்றி; குமரனாய் முறுகி - நண்பகலிற் குமரனாகிய வெம்மை மிகுந்து; இப்பால் விழைவு தீர் கிழவன் ஆகி - மாலையில் ஆசை நீங்கிய முதியவனாகி; விழுக்கதிர் உலந்து வீழ - சிறந்த கதிர்கள் கெட்டு மேற்றிசையிலே விழுதலின்; மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி - (சீவகன்) முரலும் வண்டு உழலும்படி அலர்ந்த மல்லிகை மாலையைச் சூட்டி; குழல் புரை கிளவியோடு கொழும் புகை அமளி சேர்ந்
|
|