| கேமசரியார் இலம்பகம் |
858 |
|
|
| 1521 |
கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந் | |
| |
தயலே னறியா மையுரைத் ததெலா | |
| |
மியலா ததுவோ வினியேற் கினியீ | |
| |
ருயலா வதுகண் மலர்கா ளுரையீர். | |
|
|
(இ - ள்.) கண் மலர்காள் - கண்மலர்களே!; இவை கயல் என்று - (அவன்) இக்கண்கள் கயலாயிருந்தன என்று நும்மைப் புகழும்போது; கவிழ்ந்து கிடந்து - (அதற்கு நீர்) அன்புற்றுக்கிடக்க; அயலேன் அறியாமை உரைத்ததெலாம் இயலாததுவோ - அயலேனாகிய நான் அறியாமல் நுமக்கு அவன் கூறியதெல்லாம் பிரிவையோ?; இனியேற்கு இனியீர் - இனியேனாகிய எனக்கு இனியராயிருந்தீர்!; உயலாவது உரையீர் - இனி உய்யலாம் வழியை உரைப்பீராக!
|
|
(வி - ம்.) கிடந்து - கிடக்க : எச்சத்திரிபு; மெய்ம்மறக்கச் செய்து தன்னுடன் கூடியிராமையின், 'அயலேன்' என்றாள். உரைத்ததனை அவன் செய்த தொழில் என்று கொள்க; 'பொன்னுரைத்தது' என்றாற்போல. அது சொல்லிற்றெல்லாம் என்றாற் போலவும் நின்றது. இனியீர் இகழ்ச்சிக் குறிப்பு.
|
|
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யென்று நும்மிடம் நான் இனியேனாக இருந்தேன் என்னுங்கருத்துடன், 'இனியேற்கு' என்றாள். 'நும்மை அவன் 'புலால் நாறுகின்ற கய' லெனப் புகழப் போக்கு உடன்பட்டீர், யான், 'கண்மலர்காள்!' எனப் புகழாநின்றேன். 'உய்யும்வழி உரைப்பீர்' என்னுங் கருத்துடன், 'கண்மலர்காள்!' என்றாள்.
|
( 110 ) |
| 1522 |
நெறிநீர் வளையு நிழனித் திலமும் | |
| |
பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும் | |
| |
வெறிதா ரவனெவ் வழியே கினனீ | |
| |
ரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள். | |
|
|
(இ - ள்.) அமர் தோளிணைகாள் - அவன் நினைவை அமர்ந்த தோளிணைகளே!; நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும் - கடற் சங்கவளையையும் ஒளியையுடைய முத்துக்களையும்; பொறிநீரபுனைந்து - பொறித்தாற்போலும் தன்மையவாகப் புனைந்து; எழுதி - தோளிற் கரும்பையும் முலைகளில் தொய்யிற்கொடி முதலியவற்றையும் வரைந்து; புகழும் வெறிதாரவன் எவ்வழியேகினன் - நும்மைப் புகழ்ந்துரைக்கும் மணங்கமழ் மாலையான் எவ்வழிச் சென்றனன்?; நீர் அறிவீர் உரையீர் - (முயக்கத்தை நெகிழ்ந்து போகவிட்ட) நீர் அவன் போன இடமும் அறிவீர்; நும்மை யின்னும் யான் புகழ்தற்கு அவ் வழியைக் கூறுவீராக.
|
|
(வி - ம்.) என்னிடத்தினுங் காட்டில் நும்பாற் பேரன்புடையன் என்பாள் எழுதிப் புகழும் தாரவன் என்றும், அங்ஙனமாகலின் அவன்
|