| கேமசரியார் இலம்பகம் |
863 |
|
|
| 1530 |
முயங்கினான் சொன்ன வண்டாய் | |
| |
முகிழ்முலைத் தெய்வஞ் சேர | |
| |
வுயங்குவா ளுணர்ந்து கேள்வற் | |
| |
கூனமும் பிரிவு மஞ்சி | |
| |
யியங்குவா னின்ற வாவி | |
| |
தாங்கின ளென்ப போலும் | |
| |
வயங்குபொன் னீன்ற நீல | |
| |
மாமணி முலையி னாளே. | |
|
|
(இ - ள்.) முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ்முலைத் தெய்வம் சேர - (தன்னைத் தழுவிய) கணவன் கூறிய வண்டின் வடிவாய் முகிழ்த்த முலையை உடைய இல்லுறை தெய்வம் அவள் எதிரில் வந்த அளவிலே; உயங்குவாள் - வருந்திக்கொண்டிருந்த; வயங்கு பொன் ஈன்ற நீல மாமணி முலையினாள் - விளங்கு பொன் அனைய தேமலையுடைய, நீலநிற மணிக் கண்களையுடைய முலையினாள்; உணர்ந்து - (வண்டை நோக்கித் தன் கணவன் கூறியதை) உணர்ந்து; கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி - தன் கணவனுக்குப் பழியும் இறந்துபடுதலும் நேரும் என அஞ்சி; இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் - போதற்கு ஒருப்பட்டு நின்ற உயிரைப் போகாமல் தாங்கினாள்.
|
|
(வி - ம்.) என்ப, போலும் : அசைகள்.
|
|
அவன், 'துணைவண்டு துஞ்சில் நீயும் துஞ்சுவை' என்றதனை நினைத்து ஆற்றினாள். அவள் நிலைகண்டு இரங்கிய தெய்வம், 'நின் இறந்துபாடு நின் கேள்வதற்கு ஊனமும் பிரிவுமா'மென்று கூறுவதுபோல வண்டாய் வந்து தன் தெய்வத்தன்மையால் அவன் கூறியதை நினைப்பித்தது.
|
( 119 ) |
| 1531 |
வங்சவாய்க் காமன் சொன்ன | |
| |
மணிநிற வண்டு காணீர் | |
| |
துஞ்சுவேன் றுயரந் தீரத் | |
| |
தொழுதகு தெய்வ மாவீர் | |
| |
மஞ்சுதோய் செம்பொன் மாடத் | |
| |
தென்மனை தன்னு ளென்றாள் | |
| |
பஞ்சிமேன் மிதிக்கும் போதும் | |
| |
பனிக்குஞ்சீ றடியி னாளே. | |
|
|
(இ - ள்.) பஞ்சிமேல் மிதிக்கும்போதும் பனிக்கும் சீறடியினாள் - பஞ்சியின்மேல் மிதித்தாலும் வருந்துகின்ற சிற்றடியாள்; வஞ்சவாய்க் காமன் சொன்ன மணிநிற வண்டுகாள் - வஞ்சிக்கும் வாயையுடைய காமன் கூறிய நீலநிற வண்டுகளே! -
|