| கேமசரியார் இலம்பகம் |
869 |
|
|
|
(வி - ம்.) வண்டினுக்குரைத்த மாற்றம் என்றது, ”துணை வண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை” என்றதனை (91). பாசம் - கயிறு. பாசம் என்றதற்கேற்ப, ஆக்கப்பட்ட ஆவி என்றதற்குக் கட்டப்பட்ட உயிர் என்னலே சிறப்பு. தூ - தூய.
|
( 128 ) |
| 1540 |
பையர விழுங்கப் பட்ட | |
| |
பசுங்கதிர் மதிய மொத்து | |
| |
மெய்யெரி துயரின் மூழ்க | |
| |
விதிர்விதிர்த் துருகி நையு | |
| |
மையிருங் குழலி னாடன் | |
| |
மைந்தனை வலையிற் சூழ்ந்து | |
| |
கையரிக் கொண்டுங் காணாள் | |
| |
காளையுங் காலிற் சென்றான். | |
|
|
(இ - ள்.) பையர விழுங்கப்ட்ட பசுங்கதிர் மதியம் ஒத்து - படத்தையுடைய பாம்பினால் விழுங்கப்பட்ட பைங்கதிரையுடைய திங்களைப்போன்று பசந்து; மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் - உடம்பு எரியுந் துயரத்திலே மூழ்கும்படி நடுநடுங்கி நெஞ்சுருகி வருந்துகின்ற; மை இருங் குழலினாள் தன் மைந்தனை - கரிய நீண்ட குழலாள் தன் கணவனை; வலையின் சூழ்ந்து கையரிக் கொண்டும் காணாள் - வலைபோலே சூழ்ந்துகொண்டு அரித்தல் கொண்டு தேடியும் கண்டிலள்; காளையும் காலின் சென்றான் - அவனும் காலாலே நடந்து போனான்.
|
|
(வி - ம்.) குழலினாள் : கேமசரி. தன் மைந்தனை என்றது தன் கணவனை என்றவாறு.
|
|
'நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம்' என மணிமேகலையில் (21 : 29) கணவனை மகன் எனலுங் காண்க.
|
|
அரா : அர என ஆனத விகாரம். காலின் - காற்றுப்போலென்றுமாம்.
|
( 129 ) |
| 1541 |
காழகச் சேற்றுட் டீம்பால் | |
| |
கதிர்மணிக் குடத்தி னேந்தி | |
| |
வீழ்தரச் சொரிவ தேபோல் | |
| |
விளங்கொளித் திங்கட் புத்தேள் | |
| |
சூழிருட் டொழுதி மூழ்கத் | |
| |
தீங்கதிர் சொரிந்து நல்லார் | |
| |
மாழைகொண் முகத்திற் றோன்றி | |
| |
வளைகடன் முளைத்த தன்றே. | |
|