பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 871 

வேறு

1543 எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும்
  மனைவியர்தா மெனைவர் மக்க
ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற்
  றெனைவர்நீ ருரைமி னென்றாற்
கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென்
  மனைவியரு நால்வர் மக்க
ளொவ்வாதார் தாமில்லை யொப்பா
  னொருவனென வுரைத்தான் சான்றோன்.

   (இ - ள்.) எவ்வூரீர் - நீர் எவ்வூரிலே யிருப்பீர்?; எப்பதிக்குப் போந்தீர் - எவ்வூர்க்கு வந்தீர்?; நும் மனைவியர் தாம் எனைவர் - நும் மனைவியர் எத்துணைவர்?; மக்கள் ஒவ்வாதார் தாம் எனைவர் - மக்களில் ஒழுக்கமில்லாதார் எத்துணைவர்?; மற்று ஒப்பார் எனைவர் - ஒழுக்கமுடையார் எத்துணைவர்?; உரைமின் என்றாற்கு - கூறுமின் என வினவினாற்கு; இவ்வூரேன் - இப்போது இவ்வுடம்பினிடத்தேன்; இப்பதிக்குப் போந்தேன் - இவ்வுடம்பெடுத்தற்குப் போந்தேன்; என் மனைவியரும் நால்வர் - எனக்கு மனைவியர் நான்கு பேர்; மக்கள் ஒவ்வாதார் தாம் இல்லை - மக்களில் ஒழுக்கமிலாதார் இல்லை; ஒப்பான் ஒருவன் - ஒழுக்கமுடையான் ஒருவன்உளன்; என சான்றோன் உரைத்தான் - என்று உணர்வுடையோன் கூறினான்.

   (வி - ம்.) எனைவர் - எத்தனைபேர். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலே ஒழுக்கமாதலின், ஒழுக்கமுடைமையை ஒப்பு என்று அஃதில்லாமையை ஒவ்வாமை என்றும் கூறினார்.

   இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன் என்புழி ஊர் பதி என்பன உடல் என்னும் பொருளில் கூறப்பட்டன. உணர்வு என்றது தத்துவ உணர்ச்சியினை. இஃது அணிகலன்களைப் பெறுவோன் பெறுமுன் வினவியது.

( 132 )
1544 ஒப்பா னொருமகனே நால்வ
  ரொருவயிற்றுட் பிறந்தா னென்ன
நக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல்
  யாருலகி லினியா ரென்ன
மிக்கா னுரைப்பதுவு மிக்கதே
  போலுமால் வினவிக் கேட்பேன்
றக்காய் குறித்த துரையென்றான்
  றானுரைப்பக் கேட்கின் றானே.