|
(வி - ம்.) நாகம் தோலுரிக்கும்போது தன் அகத்துள்ள நஞ்சினையும் உமிழ்ந்துவிடும் என்பது பற்றி நச்சினார்க்கினியர், ”படநாகந்தோலுரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து,” என நுண்ணிதின் உரை விரித்தனர். ”வாளரவு தோலும் விடமு நீத்தென்ன” (12 : 98) என்றார் சூளாமணியாரும்.
|
( 135 ) |