| கேமசரியார் இலம்பகம் |
875 |
|
|
|
யரா, மகனிவனா, பின்னா என்னும் மூன்றிடத்தும் ஈற்றுக் ககரமெய்யும் அகரவுயிருங் கெட்டன.
|
( 137 ) |
| 1549 |
மட்டார்பூம் பிண்டி வளங்கெழு | |
| |
முக்குடைக்கீழ் மாலே கண்டீர் | |
| |
முட்டாத வின்பப் புதாத்திறக்குந் | |
| |
தாளுடைய மூர்த்தி பாத | |
| |
மெட்டானும் பத்தானு மில்லாதார்க் | |
| |
கிவ்வுலகி லின்ப மேபோ | |
| |
லொட்டாவே கண்டீர் வினையவனைத் | |
| |
தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே. | |
|
|
(இ - ள்.) மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழும் முக்குடைக்கீழ் மாலே - தேன் பொருந்திய மலர்ப் பிண்டியின் அடியில் முக்குடைக்கீழ் எழுந்தருளிய அருகப் பெருமானே; முட்டாத இன்பப் புதாத் திறக்கும் தாள் உடைய மூர்த்தி கண்டீர் - தடையற்ற இன்ப வுலகிற் கதவைத் திறக்குந்தாழாகிய திருவடியை உடைய தலைவன் என்று அறிவீர்களாக; எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பமே போல் - எட்டேனும் பத்தேனும் இல்லாதவர்கட்கு இவ்வுலகிலே இன்பம் இல்லாததைப் போல்; அவனைத் தேறாதார்க்கு வினை ஒட்டா கண்டீர் - அவனைத் தெளியாதார்க்கு நல்வினைகள் ஒட்டா என்று அறிவீர்; உணர்ந்தீர் அன்றே - இத்தன்மையை உணர்ந்தீர் அல்லவோ?
|
|
(வி - ம்.) பிண்டி - அசோகு. மால் - அருகன். முட்டாத - தடையில்லாத. புதா - கதவு. தாள் - தாழ்ப்பாள்.
|
|
புதாத்திறக்கும் தாளாகிய பாதமுடைய மூர்த்தி மாலே என்க. எட்டானும் பத்தானும் என்றது சிறிதேனும் என்னும் பொருள்பட நின்றது. இவற்றின் உள்ள ஆனும் உம்மும் அசைகள் என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 138 ) |
| 1550 |
வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே | |
| |
செல்லினும் வெகுண்டீர் போல | |
| |
வாற்றுணாக் கொள்ளா தடிபுறத்து | |
| |
வைப்பீரே யல்லிர் போலுங் | |
| |
கூற்றங்கொண் டோடத் தமியே | |
| |
கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி | |
| |
னாற்றுணாக் கொள்ளீ ரழகலா | |
| |
லறிவொன்று மிலிரே போலும். | |
|