நாமகள் இலம்பகம் |
88 |
|
தின் ஆரழற் சீற்றத்தன்” என்றார். அச்சம் உற்றடைந்தார்க்கு என்றமையான் செருக்குற்றுப் பகைத்தார்க்கு நாகச் சீற்றத்தன் என்று வருவித்தோதுக. ஆரழற்சீற்றத்தன் என்றதனால் அவன் பேராண்மை விதந்தோதப்பட்டது. அடைந்தார்க் கமிர்தன்னவன் என்றதனால் அதன் எஃகாகிய ஊராண்மை விதந்தோதப்பட்டது.என்னை ?
|
|
|
”பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் |
|
|
ஊராண்மை மற்றதன் எஃகு” (குறள், 773) |
|
என்பவாகலான் என்க.
|
( 128 ) |
158 |
வண்கை யாற்கலி மாற்றிவை வேலினாற் |
|
றிண்டி றற்றெவ்வர் தோ்த்தொகை மாற்றினா |
|
னுண்க லைக்கிட னாய்த்திரு மாமகள் |
|
கண்க ளுக்கிட னாங்கடி மார்பனே. |
|
(இ - ள்.) திருமாமகள் கண்களுக்கு இடன்ஆம் கடி மார்பன் - திருமகள் கண்கள் வேறிடம் நோக்காமல் நோக்கும் இடமாகிய புதுமை நிறைந்த மார்பனாகிய அவன்; நுண்கலைக்கு இடன் ஆய் - நுண்ணிய கலைகளுக்கு இருப்பிடமாகி; வண்கையால் கலி மாற்றி - வண்மையுடைய கையினால் வறுமையை நீக்கி; வைவேலினால் திண்திறல் தெவ்வர் தேர்த்தொகை மாற்றினான் - கூறிய வேலினால் திண்ணிய திறலையுடைய பகைவரின் தேர்த்திரளை நீக்கினான்.
|
|
நுண்கலை என்றது , இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், என்னும் ஐந்தனையும். இவை கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணர்வன வாகலின் நுண்கலை எனப்பட்டன.
|
( 129 ) |
159 |
கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடை |
|
யோத நீருல கொப்ப நிழற்றலால் |
|
தாதை யேயவன் தாணிழற் றங்கிய |
|
காத லாற்களிக் கின்றதிவ் வையமே. |
|
(இ - ள்.) கோதை நித்திலம் சூழ்குளிர் வெண்குடை - பூமாலையும் முத்துமாலையும் சூழ்ந்த குளிர்ந்த வெண்குடையால்; ஓதம்நீர் உலகுஒப்ப நிழற்றலால் - கடல்சூழ்ந்த உலகை ஒப்ப நிழற்படுத்தலால்; தாதையே (அவ்வரசன்) உலகிற்குத் தந்தையே ஆயினான்; அவன்தாள் நிழல்தங்கிய - அவன் தாளின் நிழலிலே வாழ்வதற்கு; இவ் வையம் காதலாற் களிக்கின்றது - இவ்வுலகம் அவன்மேல் வைத்த அன்பினாற் களிப்புறுகின்றது.
|
|
(வி - ம்.) கோதை நித்திலம் : உம்மைத்தொகை . ஒப்ப-எல்லார்க்கும் ஒப்ப. தங்கிய : செய்யிய என்னும் எதிர்கால வினையெச்சம்.
|
|