பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 883 

   தன்பால் விடை கேட்டனன். அவனும் சீவகன் இறைமகனாதலறிந்து உவகை கொண்டனன். அன்புடன் விடையும் ஈந்தான். சீவகன் கனகமாலையை அங்கேயே இருக்கச் செய்து தோழரோடும் மறவரோடும் விசயை தவப்பள்ளி நோக்கிச் சென்றான்.

1557 இரங்கு மேகலை யல்கு
  லின்கனித் தொண்டையந் துவர்வா
யரங்கக் கூத்திக ணன்பின்
  மனையவட் டுறந்துசெல் பவர்போற்
பரந்த தீம்புனன் மருதம்
  பற்றுவிட் டினமயி லகவு
மரங்கொல் யானையின் மதநா
  றருஞ்சுர மவன்செலற் கெழுந்தான்.
 

   (இ - ள்.) இரங்கும் மேகலை அல்குல் இன்கனித்தொண்டை அம் துவர் வாய் - ஒலிக்கும் மேகலை தவழும் அல்குலையும் இனிய கொவ்வைக் கனிபோன்ற அழகிய சிவந்த வாயையும் உடைய; அரங்கக் கூத்திகண் அன்பின் - அரங்கில் ஆடும் பரத்தையினிடம் வைத்த அன்பினால்; மனையவள் துறந்து செல்பவர்போல் - இல்லாளை விட்டுச் செல்பவர் போல; பரந்த தீ புனல் மருதம் பற்றுவிட்டு - பரவிய இனிய நீரையுடைய மருத நிலத் தொடர்பை விட்டு; இனம் மயில் அகவும் மரம் கொல் யானையின் மதம் நாறு அருஞ்சுரம் அவன் செலற்கு எழுந்தான் - திரளான மயில்கள் கூவுகின்றதும், மரத்தைப் பிளக்கும் யானைகளின் மதம் கமழுகின்றதுமான அரிய காட்டுவழியிலே சீவகன் செல்வதற்குப் புறப்பட்டான்.

   (வி - ம்.) பழகினும் மயில் பாம்பையும், யானை பாகனையும் கொல்வன ஆதலின், பரத்தையர்க்கு மயிலும் யானையும் உடைய காடு உவமைப் பொருளாயிற்று. சுரம் - சுதஞ்சணன் கூறிய கானவர் குரம்பை சூழ்ந்த காடு.

( 1 )
1558 இரங்கு மேகலை யல்கு
  கடிமல ரவிழ்ந்தன காயா
வுலக மன்னவன் றிருநா
  ளொளிமுடி யணியந்துநின் றவர்போற்
பலவும் பூத்தன கோங்கம்
  பைந்துகின் முடியணிந் தவர்பின்
னுலவு காஞ்சுகி யவர்போற்
  பூத்தன மரவமங் கொருங்கே.