பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 892 

மறைந்து நிற்க; எண்திசை மருங்கும் நோக்கி - (இவளுடன் வந்தாருளரோ என) எட்டுத் திசையின் சார்பிலும் பார்த்து (தனியே வந்திருப்பதை அறிந்து) இவள் இயங்கிகொல் என்றான் - இவள் ஓர் இயக்கி போலும் என் றெண்ணினான்.

   (வி - ம்.) அந்நோக்கத்தின்கண் காமக்குறிப்பின்மை கண்டு நடுங்கிச் சோர நிற்ப என்க. எண்டிசை மருங்கு நோக்கி என்றது இவளுடன் கூடவந்தாருளரோ என்று நோக்கி என்பதுபட நின்றது.

( 14 )
1571 எண்ணத்தி லியக்கி யென்றே
  யிருப்பமற் றெழுத லாகா
வண்ணப்பூங் கண்க ளம்பா
  வாணுதற் புருவம் வில்லா
வுண்ணிறை யுடைய வெய்வா
  னுருவச்சா தகத்துக் கேற்பப்
பெண்ணலங் கிடந்த பேதை
  பெண்ணலங் கனிய நின்றாள்.

   (இ - ள்.) எண்ணத்தில் இயக்கி யென்றே இருப்ப - அவன் தன் கருத்திலே இயக்கி யென்றே எண்ணி இருப்ப ; பெண் நலம் கிடந்த பேதை - பெண்ணின் நலம் தங்கிய பேதையாகிய அவள்; எழுதல் ஆகா வண்ணப் பூங்கண்கள் அம்புஆ - எழுத வியலாத தன் அழகிய மலர்க் கண்கள் அம்பாகவும்; வாள் நுதற் புருவம் வில்லா - ஒளிரும் நெற்றியிற் புருவம் வில்லாகவும்; உள் நிறை உடைய எய்வான் - அவனுடைய மன நிறை கெட எய்வதற்கு; உருவச் சாதகத்திற்கு ஏற்ப - தன் உருவ இயலுக் கேற்றவாறு; பெண் நலம் கனிய நின்றாள் - தன் பெண் அழகு முற்றுப் பெற நின்றாள்.

   (வி - ம்.) எண்ணத்தில் - சீவகன் தன் கருத்தின்கண் என்க. ஓவியத்தில் எழுதவொண்ணாத கண்கள் என்க. அம்பா, வில்லா : இவை ஈற்றிற் ககர யுயிர்மெய் தொக்கு நின்றன.

( 15 )
1572 முறுவன்முன் சிறிய தோற்றா
  முகைநெறித் தனைய வுண்கட்
குறுநெறி பயின்ற கூந்தல்
  குறும்பல்கா லாவிக் கொள்ளாச்
சிறுநுதற் புருவ மேற்றாச்
  சோ்துகிற் றானை சோர
வறியுந ராவி போழு
  மநங்கனைங் கணையு மெய்தாள்.