பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 895 

1576 இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமே
லன்புருகு நல்லா ரவர்தோண்மேற் றுஞ்சினார்
தம்புலன்கள் குன்றித் தளரத்தங் காதலா
ரன்புருகு கண்புதைத் தாங்க கல்வர் நெஞ்சே.

   (இ - ள்.) நெஞ்சே-; இன்புகை ஆர்ந்த இழுது ஆர்மென் பள்ளி மேல் - இனிய அகிற்புகை நிறைந்த, வெண்ணெய் அனைய மென்மை நிறைந்த பள்ளியின் மேல்; அன்பு உருகும் நல்லாரவர் தோள்மேல் துஞ்சினார் - அன்பினால் உருகும் நல்லவராகிய அம் மங்கையரின் தோள் மேலே துயின்றவர்கள்; தம் புலன்கள் குன்றித் தளர - முதுகையாலே தம்முடைய புலன்கள் குன்றித் தளர்வடைந்ததனால்; தம் காதலார் அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் - தம் காதல் மகளிர் தம் அன்பினாலுருகிய கண்களைப் புதைத்துக்கொண்டு (அவர்களைப்பராமல்) அங்கிருந்தும் நீங்குவர்.

   (வி - ம்.) இதனாற் புலன் குறையும் என்றார். இவள் விரும்பப் பெற்றோமே யென்று கூடினார்க்குப் பின் வருவது கூறியவாறு.

( 20 )
1577 என்பினை நரம்பிற் பின்னி
  யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து
  மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி
  யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன்
  மயங்கினார் மருள வென்றான்.

   (இ - ள்.) உதிரம் தோய்த்து - உதிரத்தைத் தோய்த்து; நரம்பின் என்பினைப் பின்னி - நரம்பினாலே என்பினைக் கட்டி; இறைச்சி மெத்தி - தசையை அப்பி; புன்புறம் தோலைப் போர்த்து - புன்மையான வெளிப்புறம் மறையத் தோலைப் போர்த்து ; புறம் பொலிய மயிர் வேய்ந்திட்டு - அப்புறம் அழகுற மயிராலே மூடி; ஒன்பது வாயில் ஆக்கி - ஒன்பது வாயிலைச் செய்து ; ஊன் பயில் குரம்பை - ஊன் பழகிய குடிலை; மயங்கினார் மருள - அறிவு மாறியவர்கள் மருளுமாறு; மன்பெருந் தச்சன் செயதான் - மிகப் பெரிய தச்சன் இயற்றினான்; நல்லன் - (ஆதலால்) அவன் மிகவும் நல்லன் என்றெண்ணினான்.

   (வி - ம்.) என்பு எலும்பு. பின்னி - கட்டி. இறைச்சி - தசை. புன்புறம் - புல்லிய வெளிப்பகுதி. குரம்பை - கூடு. தச்சன் என்றது