| கனகமாலையார் இலம்பகம் |
898 |
|
|
|
யெச்சம். துயின்ற கற்பு, அஃதாவது தங்கிய கற்பென்க, துணைவி - மனைவி.
|
( 24 ) |
| 1581 |
தாயிலாக் குழவி போலச் | |
| |
சாதுய ரெய்து கின்றேன் | |
| |
வேயுலாந் தோளி னார்தம் | |
| |
விழுத்துணைக் கேள்வ நிற்கண் | |
| |
டாயினேன் றுறக்கம் பெற்றே | |
| |
னளித்தரு ளாது விட்டாற் | |
| |
றீயினு ளமிர்தம் பெய்தாங் | |
| |
கென்னுயிர் செகுப்ப லென்றாள். | |
|
|
(இ - ள்.) வேய் உலாம் தோளினார் தம் விழுத்துணைக் கேள்வ! - மூங்கிலனைய தோளையுடைய பெண்களின் சிறந்த துணையாகிய கேள்வனே!; தாய் இலாக் குழவி போலச் சாதுயர் எய்துகின்றேன் - (நின்னைக் காணும் வரை) தாயை இழந்த குழவிபோல இரந்துபடுதற்குரிய துயரத்தை அடைகின்ற நான்; நின் கண்டு துறக்கம் பெற்றேன் ஆயினேன் - நின்னைப் பார்த்தவுடன் துறக்கம் பெற்றேன் போல ஆயினேன்; அளித்து அருளாது விட்டால் - (இனி என்னை) ஆதரித்து அருளாமல் விட்டால்; தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள் - நெருப்பிலே அமிர்தத்தைப் பெய்தாற்போல என் உயிரைக் காமத் தீயிலே பெய்து கெடுப்பேன் என்றாள்.
|
|
(வி - ம்.) உலாம் : உவமைச் சொல். அவன் தோற்றம் துறவி போல இன்மையின், 'தோளினார் துணைவ' என்றாள்.
|
|
சாதுயர் - சாங்காலத்துண்டாகும் துயர்போன்ற துயர். வேய் - மூங்கில். துறக்கம் பெற்றேனாயினேன் என மாறுக. தீ - காமத்திற்குவமை. காமத்துன்பத்தானே இறந்துபடுதல் ஒருதலை என்பது கருத்து.
|
( 25 ) |
| 1582 |
மணியெழு வனைய தோளும் | |
| |
வரையென வகன்ற மார்புந் | |
| |
தணிவருங் கயத்துப் பூத்த | |
| |
தாமரை யானைய கண்ணும் | |
| |
பணிவரும் பருதி யன்ன | |
| |
முகமுமென் றயர்ந்து காமப் | |
| |
பிணியெழுந் தவலிக் கின்ற | |
| |
பேதைநீ கேளி தென்றான். | |
|