| கனகமாலையார் இலம்பகம் |
900 |
|
|
| 1584 |
விழுக்கொடு வெண்ணஞ் சல்லா | |
| |
வுகிர்மயி ருமிழ்கட் பீளைப் | |
| |
புழுப்பயில் குரம்பை பொல்லாத் | |
| |
தடிதடித் கீழ்ந்த போழ்தில் | |
| |
விழித்தியார் நோக்கு கிற்பார் | |
| |
பிள்ளையார் கண்ணுட் காக்கை | |
| |
கொழிப்பாரும் பொன்னிற் றோன்றுங் | |
| |
கொள்கைத்தாற் கொடியே யென்றான். | |
|
|
(இ - ள்.) கொடியே! - கொடி போன்றவளே!; விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் கண் உமிழ் பீளைப் பொல்லாத்தடிப் புழுப்பயில் குரம்பை - விழுக்கும் வெள்ளையான நிணமும் இவை ஒழிந்த உகிரும் மயிரும் கண் உமிழும் பீளையும் பொல்லாத ஊனும் புழுவும் பயில்கின்ற இவ்வுடம்பு; தடி கீழ்ந்த போதில் யார் விழித்து நோக்கு கிற்பார்? - ஊனைப் பிளந்த போதில் எவர் கண்ணை விழித்துப் பார்க்கும் அருவருப்பிலார்?; பிள்ளையார் கண்ணுள் காக்கை கொழிப்ப அரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்து என்றான் - கரிக்குருவியார் கண்ணிற்குக் காக்கை கொழிக்க அருமையான பொன்போல் தோன்றும் கொள்கையுடைத் தாயிற்று என்றான்.
|
|
(வி - ம்.) 'கரிக் குருவியார் கண்ணுக்குக் காக்கை பொன் ஒத்துத் தோன்றும்' என்பது ஒரு பழமொழி.
|
|
விழுக்கும் வெண்ணஞ்சும் ஊன்வகை. வெண்ணஞ்சு - நிணமுமாம். பிள்ளையார் - கரிக்குருவி. ”வெண்ணஞ்சு என்பதும்” பாடம்.
|
( 28 ) |
| 1585 |
உருவமென் றுரைத்தி யாயி | |
| |
னிறைந்ததோற் றுருத்தி தன்னைப் | |
| |
புருவமுங் கண்ணு மூக்கும் | |
| |
புலப்பட வெழுதி வைத்தாற் | |
| |
கருதுவ தங்கொன் றுண்டோ | |
| |
காப்பியக் கவிகள் காம | |
| |
வெரியெழ விகற்பித் திட்டா | |
| |
ரிறைச்சிப்போ ரிதனை யென்றான். | |
|
|
(இ - ள்.) உருவம் என்று உரைத்தியாயின் - உள்ளொழியப் புறத்தின் வடிவு நன்றெனக் கூறினையாயின்; நிறைந்த தோல் துருத்தி தன்னை - முற் கூறியவை நிறைந்ததொரு தோல் துருத்தியை; புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி
|