| கனகமாலையார் இலம்பகம் |
902 |
|
|
| 1587 |
வண்ணத் திங்கண் மதிமுகத்த | |
| |
வாளோ கருங்க யல்களோ | |
| |
வுண்ணுங் கூற்றோ வொளிவேலோ | |
| |
போதோ வுணர்க லேனாற் | |
| |
பண்ணின் றீஞ்சொலாய் படாமுலைப் | |
| |
பாவாய் கொடியே பாங்கி | |
| |
ணுண்ணுந் தேனே யமிர்தே | |
| |
யென்னின் னுயிரே யெங்கணாயோ. | |
|
|
(இ - ள்.) பண்ணின் தீ சொலாய்! - இசையனைய இனிய மொழியாய்!; படாமுலைப் பாவாய்! - சாயாத முலையை யுடைய பாவையே!; கொடியே! - கொடியே!; பாங்கின் உண்ணும் தேனே!; - தகுதியான பருகுந் தேனே!; அமிர்தே! - அமிழ்தே!; என் இன் உயிரே! - என் இனிய உயிரே!; எங்கணாயோ! - எங்குள்ளாயோ?; வண்ணம் திங்கள் மதி முகத்த - அழகிய திங்களும் போற்றும் முகத்திலுள்ளவை; வாளோ? கருங்கயல்களோ? உண்ணும் கூற்றோ? ஒளிவேலோ? போதோ - வாளோ? கரிய கயல்களோ? உயிரைப் பருகும் கூற்றுவனோ? ஒளி தரும்வேலோ! மலரோ!; உணர்கலேன் - அறியேன்.
|
|
(வி - ம்.) 'என்' என்பது வினா என்பர் நச்சினார்க்கினியர், எங்கணாயோ!: ஓ! : வியப்பு.
|
( 31 ) |
|
மதிமுகத்த - வினைத்தொகை. மதியாநின்ற முகத்திலுள்ளன என்க. உயிரையுண்ணும் கூற்றோ என்க.
|
| 1588 |
இலவம் போதே ரெழிற்றகைய | |
| |
சீறடிக ளஞ்சி யொல்கிப் | |
| |
புலவன் சித்தி ரித்த | |
| |
பொற்சிலம்பு நகப்பூ நிலத்துமே | |
| |
லுலவும் போழ்து மென்னாவி | |
| |
மலர்மேன் மிதித்தொ துங்குவாய் | |
| |
கலவ மஞ்ஞை யனையாய் | |
| |
கட்காத லொழிகல் லேனால். | |
|
|
(இ - ள்.) கலவ மஞ்ஞை அனையாய் - கலவ மயில் போன்றாய்!; இலவம்போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி - இலவ மலரனைய அழகு பொருந்திய சிற்றடிகள் நடுங்க அசைந்து; புலவன் சித்திரித்த பொன் வேலை சிலம்பு நக - பொன் வேலை செய்யும் அறிஞன் அமைத்த பொற் சிலம்பு ஒலிக்க; பூ நிலத்து மேல் உலவும் போழ்தும் - அழகிய தரைமிசை நீ உலவும் பொழுதும்;
|