| கனகமாலையார் இலம்பகம் |
910 |
|
|
|
போல்வார்; சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார் - மேலும் தம் கணவனின் துன்பத்தைத் தீர்ப்பார்கள்.
|
|
(வி - ம்.) சொல்லார் : முற்றெச்சம். வாழ்வார் : வினையாலணையும் பெயர், எழுவாயாய் நின்றது. காமனை : ஐ : அசை. இவர்கள் கற்புடை மகளிர்.
|
( 42 ) |
| 1599 |
அன்னணின் றோழி யையா | |
| |
வவளென்னைக் கண்ட கண்ணாற் | |
| |
பின்னைத்தான் பிறரை நோக்காப் | |
| |
பெருமட மாது தன்னை | |
| |
யென்னையா னிழந்து வாழு | |
| |
மாறென விரங்கி னானுக் | |
| |
கன்னளோ வென்று நக்கா | |
| |
னணிமணி முழவுத் தோளான். | |
|
|
(இ - ள்.) ஐயா நின்தோழி அன்னள் - ஐயனே! உன் தோழி அத்தகையளே; அவள் என்னைக் கண்ட கண்ணால் - அவள் என்னைப் பார்த்த விழியினால்; தான் பிறரைப் பின்னை நோக்காப் பெருமடமாது - தான் மற்றவரைப் பிறகு பாராத பெருமைமிக்க இளமங்கை; தன்னை இழந்து யான் வாழும் ஆறு என்னை - அவளைப் பிரிந்து யான் வாழும் வகை எங்ஙனம்; என இரங்கினானுக்கு - என்று வருந்திய பவதத்தினின் பேதைமையைப் பார்த்து; அணிமணி முழவுத்தோளான் அன்னளோ என்று நக்கான் - அணியணிந்த அழகிய முழவனைய தோளானாகிய சீவகன் அத்தகையளோ! என்று நகைத்தான்.
|
|
(வி - ம்.) அன்னளோ என்றது யான் கூறியவற்றாலும் தெளிவு நிகழாமல் இவனை வருந்துந் தன்மையளோ என்றவாறு. நகை, பிறர் அறியாமைபற்றி நிகழ்ந்தது. இனி யாம் இவன் இடுக்கணுக்கு உதவி யானோம் என்று மனம் மகிழ்ந்தான் என்றுமாம்.
|
( 43 ) |
வேறு
|
| 1600 |
இனையல்வேண் டாவிம் மந்திரத்தை | |
| |
யோதிநீ யொருவில் லேவள | |
| |
வனைய வெல்லை சென்றா | |
| |
லியக்கி கொணர்ந் தருளுநீ | |
| |
புனைசெய் கோல்வளை யைக்கைப் | |
| |
படுதியென் றாங்கவன் போதலு | |
| |
மனைய மாதரைக் கண்டாங் | |
| |
கடிபுல்லி வீழ்ந்த ரற்றினான். | |
|