| கனகமாலையார் இலம்பகம் | 
			946  | 
		
		
			
			
  | 
		
		
		
		 வேறு | 
		
	
		
		
	
			
			| 
			 |   | 
|  1665 | 
மணிநிற மாமை சாயல் | 
 | 
|   | 
  வளையொடு வண்டு மூசு | 
 | 
|   | 
மணிநிறப் போர்வை யாய | 
 | 
|   | 
  வரும்பெற னாணும் விற்றுப் | 
 | 
|   | 
பணிநலம் புதிய துண்டான் | 
 | 
|   | 
  பன்மலர் மாலை கொண்டேன் | 
 | 
|   | 
பிணிநிறப் புறஞ்சொ லென்னும் | 
 | 
|   | 
  பெருமிஞி றார்ப்ப வென்றாள். | 
 | 
			
	
		
		
		    (இ - ள்.) மணி நிற மாமை சாயல் - நீல மணி போலும் மாமையினையும் மென்மையினையும்; வளையொடு - வளையலையும்; அணி நிறப் போர்வை யாய அரும் பெறல் நாணும் விற்று - மகளிர்க்கு அழகிய நிறமுடைய போர்வையாகிய பெறுதற்கரிய நாணத்தையும் விற்று; பணி நலம் புதியது உண்டான் வண்டு மூசும் பன் மலர் மாலை - தாழ்கின்ற என் அழகைப் புதியதாக உண்டவன் கொடுத்த வண்டு மொய்க்கும் பல மலர்களால் ஆன மாலையை; பிணி நிறப் புறஞ் சொல் என்னும் பெரு ஞிமிறு ஆர்ப்பக் கொண்டேன் என்றாள் - நோயை நிறமாகவும் புறஞ்சொல் என்னும் பெரிய ஞிமிறுகள் ஆர்ப்பக் கொண்டேன் என்றாள். 
 
  | 
		
	
		
		
		    (வி - ம்.) மாமை - நிறம், சாயல் - மென்மை/ தன்மை மறைத்துக் கோடற்குக் காரணமாதல் பற்றி நாணத்தைப் போர்வை என்றாள். நாணமே மகளிர் அழகை மிகுவித்தலின் அணிநிறப் போர்வையாய நாணம் என்றாள். வண்டுமூசும் பன்மலர்மாலை என இயைத்துக் கொள்க. 
 
  | 
		 ( 109 )
 
  | 
	
		
		
	
			
			
			
|  1666 | 
காதலான் காதல் போல |   |  
|   | 
  வகன்று நீண் டலர்ந்தவாட்கட் |   |  
|   | 
போதுலாங் கோதை மாதர் |   |  
|   | 
  புனைந்தலர் தொடுத்த மாலை |   |  
|   | 
யாதலா லலர தாகா |   |  
|   | 
  தொழியுமே யழுங்க லென்று |   |  
|   | 
மாதுலா மழலைச் செவ்வாய் |   |  
|   | 
  மடக்கிளி மொழிந்த தன்றே. |   | 
 
 
 
			 | 
	
		
		
		    (இ - ள்.) காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண் - நின் கணவனின் அன்பைப்போல அகன்று நீண்டு மலர்ந்த ஒளிமிகுங் கண்களையும்; போது உலாம் கோதை 
 
  |