| கனகமாலையார் இலம்பகம் | 
948  | 
 | 
  | 
|  1668 | 
அணுகி முன்னின்ற வநங்க |   |  
|   | 
  விலாசினி யங்கை கூப்பிப் |   |  
|   | 
பிணைய னீட்டப் பெருந்தகை |   |  
|   | 
  யஃதே லான்முக நோக்கலுந் |   |  
|   | 
துணையி றோகை யென்னங் |   |  
|   | 
  கைக்குத் தொங்கறொடுப் பாயுநீ |   |  
|   | 
மணிசெய் மென்றோண் மருந்துநீ |   |  
|   | 
  யாருயிரு நீயே லென்றாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அணுகி முன் நின்ற அநங்க விலாசினி அங்கை கூப்பிப் பிணையல் நீட்ட - அவ்வாறு நெருங்கி அவன் முன்னே நின்ற அநங்க விலாசினி அங்கை குவித்து வணங்கி மாலையை நீட்ட; பெருந்தகை அஃது ஏலான் முகம் நோக்கலும் - சீவகன் அதனை வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்த அளவிலே; துணை இல் தோகை என் நங்கைக்குத் தொங்கல் தொடுப்பாயும் நீ - (அவளும்) ஒப்பில்லாத மயிலாகிய என் தலைவிக்கு மாலை தொடுப்பாயும் நீயே; மணி செய் மென் தோள் மருந்தும் நீ - மணிக்கலன் புனைந்த மெல்லிய தோள் மெலிவுக்கு மருந்தும் நீயே; ஆருயிரும் நீ - சிறந்த உயிரும் நீயே; ஏல் என்றாள் - (ஆதலின்) இதனை வாங்கிக் கொள் என்றாள். 
 | 
| 
    (வி - ம்.) பெருந்தகை - அன்மொழி; சீவகன். ஏலான் - முற்றெச்சம், துணை - ஒப்பு. தோகையாகிய என் நங்கைக்கு என்க. தொங்கல் - மாலை. தோள் மருந்து - தோள் மெலிவு தீர்க்கும் மருந்து, ஏல் - ஏற்றுக்கொள். 
 | 
( 112 ) | 
வேறு
 | 
|  1669 | 
மன்னர் கோயி லுறைவார் |   |  
|   | 
  பொறிசெ றித்த மாண்பினரே |   |  
|   | 
யென்ன வஞ்சி னாயென் |   |  
|   | 
  றவனைநக் காட்கஃ தன்றுகோதா |   |  
|   | 
யின்ன கொள்கை யேற்கேலா |   |  
|   | 
  தென்ன விலங்கெ யிற்றினா |   |  
|   | 
ளன்ன மன்ன நடையினா |   |  
|   | 
  டான்வ ருந்து மெனநோ்ந்தான். |   | 
 
 
 |