பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 950 

1671 நீர்செய் காந்த மணிகூந்த
  ளம்பா வைநீண் டழகிய
வோ்செய் சாந்திற் கழுநீர்
  விரைகம ழும்பூக்கள் கோத்த
வார்செய் தண்டா மரைவளைய
  மைவரை யின்வெள் ளருவிநீர்
சீர்செய் கோமகளைச் சோ்த்தினாள்
  சீதஞ் செய்யா தொழிந்தனவே.

   (இ - ள்.) ஏர் செய் சாந்தின் - அழகிய சாந்துடன்; நீர் செய் காந்த மணி - நீரைக் கொப்புளிக்கும் சந்திர காந்தக் கல்லையும்; நீண்டு அழகிய கூந்தளம் பாவை - நீண்டு அழகுடைய கூந்தளம் பாவையையும்; கழுநீர் - கழுநீர் மலரையும் ; விரைகமழும் பூக்கள் - மற்ற மணங் கமழும் மலர்களையும்; கோத்த வார்செய் தண்டாமரை வளை - கோத்த நெடிய தாமரை வளையத்தையும்; வரையின் வெள்ளருவி நீர் - மலை வீழருவிநீரையும் கொண்டு; கோமகளைச் சேர்த்தினாள்- அரசிளங்குமரிக்கு அணிவித்தாள்; சீதம் செய்யாது ஒழிந்தன - அவை தண்மையாகாமற் கொதித்தன.

   (வி - ம்.) கூந்தளம் பாவை : ஒரு வகை மலர்.

   நீர்செய்காந்தமணி - சந்திரகாந்தக்கல். ஏர் - அழகு. விரை - மணம். கோமகள் - கனகமாலை.

( 115 )
1672 பவ்வத் தங்கட் பிறந்து
  பனிபெயர்க் குந்தண் ணூற்றதாகி
யெவ்வ மன்னர் படவுலகம்
  விற்கு மரும ணியினைச்
செவ்வ னூலிற் சித்திரிக்கப்
  பட்டதனைச் சோ்த்திப் பின்னு
மவ்வ னாறுங் குழலாட்கு
  மற்று மிவைக ணாடினாள்.

   (இ - ள்.) பவ்வத் தங்கண் பிறந்து - கடலிலே தோன்றி; பனி பெயர்க்கும் தன் ஊற்றதாகி - பனியை மாற்றும் தண்ணிய ஊற்றையுடையதாய்; மன்னர் எவ்வம்பட - அரசர் வருத்தம் உற; உலகம் விற்கும் அருமணியினை - உலகை விற்கும் அரிய முத்தினை; செவ்வன் நூலின் சித்திரிக்கப் பட்டதனை - நல்ல நூல் கோக்கப்பட்டதனை; பின்னும் சேர்த்தி - மறுபடியும்