பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 954 

யும்; மருப்பிடைக் குளிக்கும் ஆறும் - அது கொல்லப் புகுந்தால் கொம்புகளினிடையே ஆம்படியையும்; நூலிடைக் கிடந்த ஆறே - நூலிற் கூறியவாறே; நுனித்தவன் கொடுப்பக் கொண்டார் - கூரிதாகக் கற்ற சீவகன் கொடுப்பக் கொண்டனர்.

   (வி - ம்.) இது யானையுடன் தனித்துப் போர் செய்யும் முறை.

( 121 )
1678 கொடிநெடுந் தேரின் போருங் குஞ்சரங் குறித்த போருங்
கடுநடைப் புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி
யிடனறிந் திலங்கும் வைவா ளிருஞ்சிலை குந்த மூன்று
முடனறிந் தும்ப ரார்க்கு முரைப்பருந் தகைய ரானார்.

   (இ - ள்.) கொடி நெடுந் தேரின் போரும் - கொடியையுடைய நீண்ட தேரூர்ந்து செய்யும் போரும் ; குஞ்சரம் குறித்த போரும் - யானையாற் கருதிய போரும்; கடுநடைப் புரவிப் போரும் - விரைந்து செல்லும் குதிரைப் போரும்; கரப்பு அறக்கற்று முற்றி - தெளிவாகக் கற்றறிந்து முதிர்ந்து; இடன் அறிந்து இலங்கும் வைவாள் இருஞ்சிலை குந்தம் மூன்றும் - (இவ்வூர்த்திகளிலிருந்து) வினை செய்யும் இடம் அறிந்து (செலுத்தும் பொழுது) விளங்கும் வாளும் பெரிய வில்லும் எறிகோலும் என்கிற மூன்றையும்; உடன் அறிந்து - சேர அறிந்து; உம்பரார்க்கும் உரைப்ப அருந் தகையரானார் - வானோர்க்கும் புகழ்தற்கரிய தகுதியுடையவரானார்.

   (வி - ம்.) தேரின் போர் - தேர்கொண்டு செய்யும் போர். குஞ்சரம் - யானை. கரப்பற என்றது நன்கு விளக்கமாக என்றவாறு. வைவாள் - கூரிய வாள். இருஞ்சிலை - பெரிய வில். குந்தம் - எறிகோல். உம்பரார் - தேவர்.

( 122 )
1679 தானையு ளன்றி நின்ற
  தனியிட மொற்றி மன்னர்
தானைமேற் சென்ற போழ்தும்
  வென்றியிற் றளர்த லின்றித்
தானையை யுடைக்கும் வெம்போர்த்
  தருக்கினார் மைந்த ரென்று
தானைசூழ் மன்னற் குய்த்தார்
  மன்னனுந் தருக வென்றான்.

   (வி - ம்.) தானையுள் அன்றி - படையினுள் அல்லாமல்; தனியிடம் ஒற்றி - தாம் தனியே நின்ற இடத்தை ஒற்றிப் பார்த்து; மன்னர் தானைமேல் சென்ற போழ்தும் - பகை மன்னரின் படைமேற் சென்ற காலத்தும்; வென்றியில் தளர்தல்