பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 959 

வேட்கையுறவும் மொழியால் வேட்கை தோன்றாமல் மறுத்தவுடன்; தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கைபற்றி - ஊனைச் சுவைபார்த்து விளங்கும் வேலினான் தன் கையினாலே சீவகனுடைய முன் கையைப் பிடித்துக்கொண்டு; இடிமுரசு அனைய சொல்லால் இற்று என விளம்புகின்றான் - இடியும் முரசும் போன்ற மொழியால் இத்தன்மைய தென்று ஓரு மொழி கூறுகின்றான்.

   (வி - ம்.) 'வடியமை' என்பது பாடமாயின், ஆராய்ச்சி அமைந்த என்க.

   வடிவு அமை மனம் - கனகமாலை உருவம் பதியப்பெற்ற மனம். தடி - தசை, வேலான் - தடமித்தன், இற்று - இத்தன்மைத்து.

( 129 )
1686 பூவியல் கோயில் கொண்ட
  பொன்னனா ளனைய நங்கை
காவியங் கண்ணி வந்து
  பிறத்தலுங் கண்க ளீண்டி
மூவிய றிரித லின்றிச்
  சாதக முறையிற் செய்தா
ரேவியல் சிலையி னாய்க்கே
  யுரியளென் றுரைப்ப நேர்ந்தான்.
 

   (இ - ள்.) பூ இயல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய காவி அம் கண்ணி நங்கை - தாமரை மலரால் இயன்ற கோயிலைக் கொண்ட திருவைப் போன்றவளும், காவி அனைய கண்ணாளும் ஆகிய இப் பெண்; வந்து பிறத்தலும் - எனக்கு மகளாக வந்து பிறந்தவுடனே; கணிகள் ஈண்டி - சோதிடர்கள் கூடி; மூஇயல் திரிதல் இன்றி முறையின் சாதகம் - மூன்றியலும் கெடுதல் இல்லாமல் முறைப்படி சாதகத்தை; ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று செய்தார் - அம்பு பொருந்திய வில்லையுடைய நினக்கே பொருந்தியவள் என்று குறித்தனர்; உரைப்ப நேர்ந்தான் - என அரசன் கூறச் சீவகன் ஒப்பினான்.

   (வி - ம்.) மூவியல் : சிரோதயம், பூபதனம், தெரியுங் காலம், மூவியலை 'உதயா ரூடக்கவிப் புக்கள்' என்பர் நச்சினார்க்கினியர்.

   கலைகளும் வடிவு முதலியனவும் உடையவன் ஒருவன் என்றலின் இவனே யாயிற்று.

( 130 )
1687 வாருலா முலையி னாட்கும்
  வரிசிலைத் தடக்கை யாற்குஞ்
சீருலாங் கோலஞ் செய்தார்
  செப்பினார் வதுவை நன்னாட்.