கனகமாலையார் இலம்பகம் |
967 |
|
|
நுண்ணிய இடை மலர்மாலையையும் அணிந்தால்; ஏம் ஆராது என்று இனைவார் - இன்பம் நிறையாமல் இறும் என்று வருந்தும் காதலர்; எண்ணார் துறந்தார் - என்னை நினையாராய்க் கைவிட்டார்; எண்ணார் துறப்ப இனவளையும் தோள் துறப்ப - இங்ஙனம் அவர் நினையாமல் துறப்பத் தொகுதியான வளைகளும் தோளினின்றும் நழுவ; மண் ஆர் வேல் கண் துயிலா மருள்வேனோ? - மஞ்சனம் ஆடுதல் பொருந்திய வேலனைய கண்கள் உறங்காமல் மயங்குவேனோ?
|
(வி - ம்.) ஏம் - இன்பம். ஏமாராது, என்றது முறிந்துபடும் என்னும் பொருள் குறித்தது. மண் - மஞ்சனமாடுதல்.
|
( 143 ) |
1700 |
வண்டூத வம்மருங்கு னோமென்று பூமாலை | |
|
கொண்டோச்சுங் காதலார் கூடார் துறந்தார் | |
|
கூடா ரவர்துறப்பக் கோல்வளையுந் தோடுறப்பத் | |
|
தோடார்பூங் கண்டுயிலா தோழி துயர்வேனோ. | |
|
(இ - ள்.) தோழி - தோழியே!; வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று - இயல்பான மணத்தை நுகர வண்டுகள் முரல்வதனாலே அழகிய இடை வருந்தும் என்று; பூ மாலை கொண்டு ஓச்சும் காதலார் - ஒப்பனைக்கு வந்த மலரையும் மாலையையும் வீசிஎறியும் காதலன்; கூடார் துறந்தார் - கூடாமல் கைவிட்டார்; கூடார் அவர் துறப்பக் கோல் வளையும் தோள் துறப்ப - கூடாமல் அவர் நீங்கத் திரண்ட வளையும் தோளினின்றும் நழுவ; தோடு ஆர் பூங்கண் துயிலா துயர்வேனோ? - இதழ்களையுடைய மலரனைய கண்கள் உறங்காவாய் நான் வருந்துவேனோ?
|
(வி - ம்.) அம் மருங்குல் - அழகிய இடை. வண்டூதவே நோமிது இவற்றை அணியின் இறுதல் ஒருதலை என்று பூமாலை ஓச்சும் காதலார் என்பது கருத்து. இவை அகத்திணைப் பாடலாதற்குச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது புனைந்தனள் என்க.
|
( 144 ) |
வேறு
|
1701 |
ஊன்றகர்த் தனைய போன்று | |
|
மூடெரி முளைப்ப போன்றுந் | |
|
தோன்றுபூ விலவத் தங்கட் | |
|
டொகையணி லனைய பைங்காய் | |
|
கான்றமென் பஞ்சி யார்ந்த | |
|
மெல்லணை யாழ்கை நீக்கித் | |
|
தேன்றயங் கிணர்பெய் கோதை | |
|
சிந்தையி னீட்டி னாளே. | |
|