கனகமாலையார் இலம்பகம் |
970 |
|
|
1705 |
திங்கள்வாண் முகமு நோக்கான் | |
|
றிருமுலைத் தடமு நோக்கா | |
|
னங்கதிர்க் கலாப மின்னு | |
|
மணியல்குற் பரப்பு நோக்கான் | |
|
செங்கயற் கண்ணி னாடன் | |
|
சீறடிச் சிலம்பு நோக்கி | |
|
யெங்குளா ரடிக ளென்னா | |
|
வின்னண மியம்பி னானே. | |
|
(இ - ள்.) செங்கயல் கண்ணினாள்தன் - சிவந்த கயல் போன்ற கண்களையுடைய தத்தையின்; திங்கள் வாள் முகமும் நோக்கான் - திங்களைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தையும் நோக்கானாய்; திருமுலைத் தடமும் நோக்கான் - அழகிய முலைத் தடத்தையும் நோக்கானாய்; அம் கதிர்க் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான் - அழகிய ஒளி செயும் கலாபம் மின்னுகின்ற அழகிய அல்குற் பரப்பையும் பாரானாய்; சீறடிச் சிலம்பு நோக்கி - தான் இறைஞ்சி நிற்றலின் அவளுடைய சிற்றடிக்கண் சிலம்பொன்றையுமே நோக்கி; எங்கு அடிகள் உளார் என்னா இன்னணம் இயம்பினான் - எங்கே தலைவர் இருக்கின்றனர் என்று வினவி மேலும் இவ்வாறு கூறினான்.
|
(வி - ம்.) முகச் சோர்வையும் முலைப்பசப்பையும் ஆடை மாசுண்டதையும் நோக்கியிருப்பானெனிற் கணவன் பிரிவால் அவள் வருந்தியிருக்கின்ற நிலையை அறிவான். சிலம் பொன்றையுமே நோக்கியதால், அவன் பிரியவும் அணிசுமந்திருக்கின்றனள் என்று வருந்தி வினவுகிறான். உம்மைகள் வருத்த மிகுதியை உணர்த்தின.
|
( 149 ) |
1706 |
பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் | |
|
புண்ணியன் பொன்றி னானேல் | |
|
வெறிகுலாய்க் கிடந்த மாலை | |
|
வெள்வளை முத்த நீக்கி | |
|
நெறியினா னோற்ற லொன்றோ | |
|
நீளெரி புகுத லொன்றோ | |
|
வறியலென் கொழுநன் மாய்ந்தா | |
|
லணிசுமந் திருப்ப தென்றான். | |
|
(இ - ள்.) பொறி குலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல் - மூவரியாகிய இலக்கணம் விளங்கிக் கிடந்த மார்பையுடைய புண்ணியன் இறந்தான் எனின்; வெறி குலாய்க் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி - மணங் குலவிக் கிடந்த
|