கனகமாலையார் இலம்பகம் |
972 |
|
|
1708 |
விதிமுக மணங்க ளெய்தி | |
|
வீற்றிருந் தின்ப முய்ப்ப | |
|
மதிமுக மறியு நாமே | |
|
வாடுவ தென்னை யென்றாள். | |
|
(இ - ள்.) மது முகத்து அலர்ந்த கோதை - தேனைத் தன்னிடங் கொண்டு மலர்ந்த மாலையாள்; மைந்தற்கு மாற்றம் உரைப்பாள் - நந்தட்டனுக்கு விடை கூறுகின்றவள்; கொதி முகக் குருதி வைவேல் குருசிலோ நம்மை உள்ளான் - காயும் முகமுடைய இரத்தம் தோய்ந்த கூரியவேலை அணிந்த தலைவனோ நம்மை நினையானாய்; விதிமுக மணங்கள் எய்தி வீற்றிருந்து இன்பம் உய்ப்ப - ஊழின் வாயிலாக மணங்களைப் பெற்று வீற்றிருந்து இன்பம் நிகழ்த்த; மதிமுகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள் - மதிமுகம் என்னும் விஞ்சையை அறிந்திருக்கின்ற நாமே இதற்குப் பிணங்கு தலன்றித் துன்பம் உண்டாம் என வாடுவது என் என்றாள்.
|
(வி - ம்.) நாம் எனத் தன்னை உயர்த்திக் கூறினாள்.
|
கோதை : காந்தருவதத்தை. குருசில் : சீவகன். உள்ளான் - நினையாதவனாய். விதி - ஊழ், மதிமுகம் - தூரியவிடத்தே நிகழ்வனவற்றை அறிதற்குரிய வித்தை. இதனை ஆபோகினியென்றும் கூறுப. இதனால் சீவகன் உயிருடன் இருத்தன் முதலிய செய்திகளும் உணர்த்தினாளாயிற்று.
|
( 152 ) |
1709 |
வேண்டிய தெமக்கு நேரின் | |
|
வில்வலாய் நுமைய னாரைக் | |
|
காண்டியென் றுரைப்பக் காளை | |
|
யெழுமையு மடிமை நேர | |
|
மாண்டதோர் விஞ்சை யோதி | |
|
மதிமுகந் தைவந் திட்டா | |
|
ணீண்டது பெரிது மன்றி | |
|
நினைத்துழி விளக்கிற் றன்றே. | |
|
(இ - ள்.) வில்வலாய்!- வில் வல்லோனே!; வேண்டியது எமக்கு நேரின் - யாம் வேண்டிய அடிமைத் தொழிலை நீ எமக்கு ஒப்பினால்; நுமையனாரைக் காண்டி என்று உரைப்ப - நும் ஐயனாரைக் காண்பை என்று தத்தை நகை மொழி நவில; காளை எழுமையும் அடிமை நேர - அவனும் இம்மையே அன்றி எழுமையும் அடிமையாகக் கடவேன் என்று நேர்ந்தானாக; மாண்டதோர் விஞ்சை ஒதி மதிமுகம் தைவந்திட்டாள் - அவள் ஒரு விஞ்சையைக் கூறித் தன் திங்களனைய முகத்தைத் தடவி
|