பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 975 

கலன்களையும் பிறவறையும் அணிந்து சென்ற பிறகு; அணி செய்கோதை அம் காமினி ஓதினாள் - அழகிய கோதையாளாகிய அவள் ஆகாய காமினி என்னும் மந்திரத்தை ஓதினாள்.

   (வி - ம்.) பல்கலம் எனவே படைக்கலங்களும் அடங்கின, பணியின் என்றது சீவகன் கொண்டு நிற்கிற நிறமும் வடிவும் அவனைக் காணுமளவும் இவனுக்கு நிற்க வென்று நிருமித்தனை. இங்ஙனம் நிருமித்த தென்னெனின், நந்தட்டனுடைய உண்மை வடிவுடனே கொண்டுபோய் அரசன் கோயிலில், 'ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பினுள்ளே' (நெடுநல். 107) வைத்தாற் சீவகன் அறிதற்கு முன்னே தீங்கு நேரும் என்று கருதியும், அரசன் கோயிலுக்கு வெளியே விட்டாற் சீவகன் என்னும் பெயர் ஆண்டு வழங்காமையின், இவன் சீவகனுடைய புனைபெயர் அறிந்து கோயிலுட் சேறல் அரிதென்று கருதியும் என்க. அஃது, 'அந்நாட்டவ்வூரப் பெயரல்லாப் பெயர் சொன்னான்' (சீவக -1637) என்பதனாலுணர்க. இதனானே சுதஞ்சணனை நீங்கிய பின்பு தன்னை மறைத்தற்கு வடிவும் பெயரும் வேறாகவே நிகழ்த்துகின்றானென்பதூஉம் பெற்றாம். வடிவு மறையாவிடத்து நாடும் ஊரும் மறைத்ததனாற் பயனின்றாம். இவ் விலகம்பகங்களிற் சீவகனென்றது நூலாசிரியர் கூற்று. இனி, இவ்வாறன்றி, அரசர் குலத்திலும் வணிகர் குலத்திலும் பிறந்தவர்கட்குச் சிறிது வடிவொப்பன்றி ஒரு வடிவே என்று மேற்கூறல் பொருந்தாது. ஒரு வடிவே என்பது ஆசிரியர் கருத்தாயின் ஈண்டன்றிப் பிறாண்டும் இருவர்க்கும் ஒரு வடிவே என்று கூறுவர். அது கூறாமையானும் சீவகனுக்கு மாற்று வடிவும் அம் மாற்று வடிவே நந்தட்டனுக்கும் தத்தையால் நல்கப்பட்டதென்றும் கொள்வதே ஆசிரியர் கருத்து.

( 157 )
1714 சாந்தி னான்மெழு கித்தட மாமல
ராய்ந்த தாமங்க ணாற்றி யகிற்புகை
யேந்தி யிட்டிளை யாரொடு நீங்கினாள்
காந்தி வண்டுணுங் கற்பகக் கோதையே.

   (இ - ள்.) சாந்தினால் மெழுகி - சாந்தாலே தரையை மெழுகி; தடமா மலர் ஆய்ந்த தாமங்கள் நாற்றி - குளத்திலுள்ள பெரிய மலர்களால் அமைந்த மாலைகளைத் தூக்கி; அகில் புகை ஏந்தி யிட்டு - அகிற் புகை எடுத்துக் காட்டி; காந்தி வண்டு உணும் கற்பகக் கோதை இளையாரொடு நீங்கினாள் - பசித்து வண்டுகள் தேனைப் பருகுங் கற்பக மலரால் ஆகிய கோதையாள் தோழிகளுடன் வெளிப் போந்தனள்.

   (வி - ம்.)தடம் - குளம். தாமம் - மாலை, நாற்றி - தூக்கி, ஏந்தியிட்டு : ஒருசொல். காந்தி - பசித்து. வயிறு காந்துகிறதென்னும் வழக்குண்மை உணர்க. கோதை : காந்தருவதத்தை.

( 158 )
1715 தூமம் மார்ந்த துகிலணைப் பள்ளிமேற்
காமன் றம்பியிற் காளை கிடந்தபி
னேம மாபுரத் திட்டதொர் மாதெய்வ
நாம நல்லொளி நந்தனை யென்பவே.