கனகமாலையார் இலம்பகம் |
979 |
|
|
விட்டு வெறு நிலத்திலே; நீரிதின் கிடந்தது என்கொல் - பண்புறப் படுத்திருந்தது என்னோ?; என்று யான் நினைந்துபோகி - என்று நான் எண்ணிச் சென்று; சேர்துணை கழறச் சென்றேன் - கனகமாலையைச் சினந்து வினவ அந்தப்புரத்திற்குப் போனேன்; போர்பல கடந்த வேலோய்! - பல போர்களையும் வென்ற வேலோனே!; மாயம் கொல்? - மாயமோ?; செல்வியோடு ஆங்குக் கண்டேன் - கனகமாலையுடன் சீவகசாமியை அங்கே பார்த்தேன்; போற்றி என்றாள் - இந்நிலையை ஓம்புக என்றாள்.
|
(வி - ம்.) இவ்வாறு வசுந்தரி கூறினாள் என்றான்.
|
( 164 ) |
1721 |
கணைகடி கண்ணி சொல்லக் | |
|
காணிய யானுஞ் சென்றேன் | |
|
மணியிலங் கொண்பொன் வைவாள் | |
|
கேடக மருங்கு வைத்த | |
|
விணைகடி சீய மன்னா | |
|
னிளமையும் வனப்பு மேருந் | |
|
துணையமை வடிவுஞ் சொல்லி | |
|
னிற்பொறி யொற்றிக் கொண்டான். | |
|
(இ - ள்.) கணைகடி கண்ணி சொல்ல யானும் காணிய சென்றேன் - அம்பை வெறுத்த கண்ணினாள் இவ்வாறு கூற, யானும் பார்க்கச் சென்றேன்; மணி இலங்கு ஒண் பொன் வைவாள் கேடகம் மருங்கு வைத்த - மணிகளிழைத்த ஒள்ளிய பொன்னாலாகிய கூரிய வாளும் கேடகமும் அருகே வைத்திருக்க; இணைகடி சீயம் அன்னான் - உவமையில்லாத சிங்கம் போன்றவன்; இளமையும் வனப்பும் ஏரும் துணை அமை வடிவும் - இளமையும் அழகும் எழுச்சியும் ஒப்பில்லாத உருவமும்; சொல்லின் நின்பொறி ஒற்றிக் கொண்டான் - கூறுதலுறின் நின் உத்தம இலக்கணத்தை நின்னிடத்துப் பொருத்திக் கொண்டான்.
|
(வி - ம்.) வனப்பு - பல உறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. துணை அமை வடிவு - உவமையின்மையாகிய உருவம். ”துணை அமை வடிவு” என்பதற்கு இளமை வனப்பு ஏர் இவற்றிற்குத் துணையாகப் பொருந்திய வடிவு என்றும் பொருள்கொள்ளலாம். துணை - சார்பு.
|
( 165 ) |
1722 |
நீண்டதோ ணெடிய செங்க | |
|
ணீலமாய்ச் சுரிந்த குஞ்சிப் | |
|
பூண்டதோ ரார மேனிப் | |
|
பொன்னுரைத் திட்ட தொக்குங் | |
|