பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 980 

1722 காண்டகு காதிற் றாழ்ந்த
  குண்டலங் குவளைப் பைந்தா
ராண்டகை யழகன் யார்கொ
  லறியல னவனை யென்றான்.

   (இ - ள்.) நீண்ட தோள் - நீண்ட தோள்களையும்; நெடிய செங்கண் - நீண்ட செங்கண்களையும்; நீலமாய்ச் சுரிந்த குஞ்சி - நீலநிறமாய் நெளிந்த முடிமயிரையும்; பொன் உரைத்திட்டது ஒக்கும் - கல்லிற் பொன்னை உரைத்தாற்போன்ற ; பூண்டது ஓர் ஆரம் மேனி - அணிந்ததாகிய ஒரு முத்து மாலையையுடைய மேனியையும்; காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் - காணத்தகுங்காதிலே தங்கிய குண்டலத்தையும்; குவளைப் பைந்தார் - குவளை மலரால் ஆன புதிய மாலையையும் உடைய; ஆண்தகை அழகன் யார் கொல் - ஆண்தகையாகிய அழகன் யாரோ?; அவனை அறியலன் என்றான் - அவனை அறிகிலேன் என்று விசயன் கூறினான்.

   (வி - ம்.) வசுந்தரி, அடிகள் வெறுநிலத்தே கிடந்தார் என்று கழறச் சென்றே னென்றமையானும், விசயன் நிற்பொறி ஒற்றிக் கொண்டான் என்றமையானும், உவமை கூறுதல் இன்றி இருவரும், இருவர்க்கும் ஒரு வடிவென்றே கூறினார்கள். உவமையாவது சிறிது ஒத்து இரண்டிற்கும் வேறுபாடு உணர்த்துவது. இஃது அஃதன்மை உணர்க. பொறியும் ஒன்றில் அழுத்தினால் ஒப்பன்றி அதுவேயாய் இருக்கும் என்று உணர்க. இவ்வாற்றானும் நிருமித்தமையே கூறிற்றாம், வசுந்தரி பெண்பாலாதலின் தெய்வத் தன்மை உணர்ந்திலள்.

( 166 )
1723 இனத்திடை யேறு போலு
  மெறுழ்வலி யுரைத்த மாற்ற
மனத்திடை மகிழ்ந்து கேட்டு
  மைந்தனந் தட்ட னேயாம்
புனத்திடை மயில னாளாற்
  பொருளுரை பெற்று வந்தா
னெனத்தவி ராது சென்றாங்
  கெய்தின னென்ப வன்றே.

   (இ - ள்.) இனத்திடை ஏறு போலும் எறுழ்வலி உரைத்த மாற்றம் - ஆவினத்திடை விடைபோலும் பெருவலியுடையான் கூறிய மொழியை; மனத்திடை மகிழ்ந்து கேட்டு - உள்ளத்திலே களிப்புடன் கேட்டு; மைந்தன் நந்தட்டனே ஆம் - இவர்கள் கூறிய மைந்தன் நந்தட்டனே ஆகும்; புனத்திடை மயிலனாளால்