கனகமாலையார் இலம்பகம் |
985 |
|
|
(வி - ம்.) பங்கயம் - தாமரை, பொருந்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; இதனைச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. காளை புலம்புதல் வேண்டா - முன்னிலைப் புறமொழி - மருந்தனாள் - கனகமாலை, கற்பினாள் - கனகமாலை. அவன் - நந்தட்டன்.
|
( 173 ) |
1730 |
கொழுநனைக் குறிப்பி னாலே | |
|
குமரன்யா ரென்று நோக்கக் | |
|
கழுமிய கற்பி னாய்நின் | |
|
மைத்துன னைய னென்ன | |
|
வெழுமையும் பெறுக வின்ன | |
|
விளங்கிளைச் சுற்ற மென்றாள் | |
|
கொழுமலர்த் தடங்கட் செவ்வாய்க் | |
|
குவிமுலைக் கொம்ப னாளே. | |
|
(இ - ள்.) கொழுமலர்த் தடங்கண் செவ்வாய் குவிமுலைக் கொம்பனாள் - வளவிய மலர் போன்ற பெரிய கண்களையும் செவ்வாயையும் குவிமுலையையும் உடைய பூக்கொம்பு போன்றவள்; குமரன் யார் என்று கொழுநனைக் குறிப்பினாலே நோக்க - காளை யாவன் என்று கணவனைக் குறிப்பாக நோக்க; கழுமிய கற்பினாய்! ஐயன்நின் மைத்துனன் என்ன - நிறைகற்புடையாய்! ஐயன் உன் மைத்துனன் என்றுரைக்க; இன்ன இளங் கிளைச் சுற்றம் எழுமையும் பெறுக என்றாள் - இத்தகைய இளங்கிளையாய உறவினையான் எழுபிறப்பும் பெறுவேனாக என்றாள்.
|
(வி - ம்.) கொழுநன் - கணவன், குமரன் என்றது இவன் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. கழுமுதல் - நிறைதல். மைத்துனன். இளங்கிளைச் சுற்றம் என்பன கொழுந்தன் என்னும் பொருளன.
|
( 174 ) |
1731 |
குடவரை யனைய மார்பிற் | |
|
குங்கும மெழுதிக் கோல | |
|
வடவரை வைரச் சாதி | |
|
வாலொளி கலந்த பைம்பூண் | |
|
டடவரை மார்பின் மின்னத் | |
|
தம்பியோ டமிர்த முண்டான் | |
|
படவர வல்கு லாளும் | |
|
பான்மையால் விருந்து செய்தாள். | |
|
(இ - ள்.) குங்குமம் எழுதி குடவரை அனைய மார்பின் - குங்குமம் எழுதலாலே கதிரவன் மறையும் அத்தகிரி போன்ற நந்தட்டன் மார்பில் அணிந்த; கோல வடவரை வைரச்சாதி வால்ஒளி கலந்த பைம்பூண் - அழகிய இமயமலையினது வைரத்
|