பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 987 

 

   (இ - ள்.) அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து ஞாயிறும் அத்தகிரியை அடைதலாலே; புண் உமிழ் குருதி போர்த்த பொருகளம் போன்று தோன்றி - புண்ணிலிருந்து சொரியும் குருதியைப் போர்த்த போர்க்களம்போலத் தோன்றி; செவ்வான் கொள் அந்தி - செக்கர்வான் கொண்ட அந்திப் போதிலே; துண் எனக் களத்தின் நீங்கித் தொல்நகர்ப் புறத்துத் தொக்கு - (மழை மிகுதியால்) எல்லோரும் விரைந்து அவ்விடத்தினின்றும் பெயர்ந்து பழைமையான நகரின் வெளியிலே கூடி; எரியும் வேலான் பதுமுகன் செய்வது எண்ணுமின் என்றான் - ஒளிரும் வேலானாகிய பதுமுகன் இனிச் செய்யவேண்டுவதைச் சிந்தியுமின் என்றான்.

   (வி - ம்.) சுதஞ்சணனால் மிகுதியான மழை வந்தது. சீவகன் காணப்படாமையின் எண்ணுமின் என்றான்.

( 177 )
1734 மின்னென மிளிரும் பைம்பூட்
  புத்திசேன் வெகுண்டு வெய்ய
கன்னவி றோளி னானைக்
  காண்கலே மாயி னின்னே
மன்னனை வாளி னானே
  வானகங் காட்டி மூதூர்
தன்னையுஞ் சவட்டிப் போகிச்
  சாமியைச் சார்து மென்றான்.

   (இ - ள்.) மின்என மிளிரும் பைம்பூண் புத்திசேன் வெகுண்டு - மின்போல விளங்கும் பூணையுடைய புத்திசேனன் சீறி; வெய்ய கல்நவில் தோளினானைக் காண்கலேம் ஆயின் - கொடிய மலைபோன்ற தோளையுடை சீவகனைக் கண்டிலோம் எனின்; இன்னே வாளினாலே மன்னனை வான் அகம் காட்டி - இப்போதே வாளாலே அரசனை விண்ணுலகிற்கு விடுத்து; மூதூர் தன்னையும் சவட்டிப் போகி - பழம்பதியையும் அழித்துச் சென்று; சாமியைச் சார்தும் என்றான் - சீவகசாமியைக் காண்போம் என்றான்.

   (வி - ம்.) புத்திசேன் - புத்திசேனன். தோளினானை - சீவகனை. காண்கலேம் - தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. இன்னே -